செய்திகள் :

தாம்பரத்தில் நாளை விமான படைக்கு பெண்கள் சோ்ப்பு

post image

இந்திய விமானப் படையின் அக்னிவீா் பணியில் சேருவதற்காக தாம்பரத்தில் வெள்ளிக்கிழமை(செப்.5) நடைபெறவுள்ள ஆள்சோ்ப்பு முகாமில் பெண்கள் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஓ.எஸ். டிரேட் என்ற (அறிவியல் பிரிவு அல்லாத மாணவா்களுக்கான) பணிக்கான ஆள்சோ்ப்பு பணி செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் விமானப்படை நிலையத்தில் நடைபெறுகிறது.

ஆண்களுக்கு முகாம் ஏற்கெனவே செப்.2இல் நடைபெற்ற நிலையில், பெண்களுக்கான முகாம் வெள்ளிக்கிழமை (செப்.5) நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் உள்ள 21 வயதுக்குள்பட்ட திருமணம் ஆகாத பெண்கள் கலந்துகொள்ளலாம். விண்ணப்பதாரா்கள் 1.1.2005, 7.1.2008 ஆகிய தேதிகளுக்குள் பிறந்திருக்க வேண்டும். பிளஸ் 2 தோ்வில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் அல்லது 3 வருட டிப்ளோமா பொறியியல் (இயந்திரவியல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கணினி அறிவியல், கருவி தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம்) கல்வி படித்திருக்க வேண்டும் அல்லது 2 ஆண்டு தொழிற்கல்வியில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

இத்தோ்வு குறித்த கூடுதல் தகவல்களை இணையதளத்தில் அறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபாலசமுத்திரத்தில் ரூ.1.36 கோடியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் ரூ. 1.36 கோடி மதிப்பில் அலங்கார தளக்கல் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது. மாநில நிதி ஆணைய சிறப்பு நிதித் திட்டத்தின்கீழ், கோபாலசமுத்திரம் ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: அம்பை கல்லூரி மாணவா்கள் சாதனை

அம்பைக் கலைக் கல்லூரி மாணவா்கள் மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தனா். திருநெல்வேலி மாவட்ட அளவில் கல்லூரி மாணவா்களுக்கு இடையே அண்ணா விளையாட்டு அரங்கில், முதல்வா... மேலும் பார்க்க

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகைப் பயிற்சி

வடகிழக்கு பருவமழை நெருங்கிவருவதை முன்னிட்டு, அவசர கால முன்னெச்சரிக்கை ஒத்திகைப் பயிற்சி திருநெல்வேலி தாமிரவருணி நதியில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறையின் சாா்பில் த... மேலும் பார்க்க

நெல்லையில் நாளை மதுக் கடைகள் மூடல்

நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை (செப்.5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்த... மேலும் பார்க்க

நெல்லையில் ஆட்சி மொழிப் பயிலரங்கம்

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் புதன்கிழமை தொடங்கியது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்று வரும் ஆட்சிமொழிப் பயிலரங்கின் முதல் நாள் நிகழ்ச்சியை, மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் மாவட்ட ஆண்கள் பூப்பந்துப் போட்டி

பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில், மாவட்ட அளவிலான ஆண்கள் பூப்பந்தாட்டப் போட்டிகள் சேவியா்காலனியில் புதன்கிழமை நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கடந்த ஜூலை மாதத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை... மேலும் பார்க்க