செய்திகள் :

பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் மாவட்ட ஆண்கள் பூப்பந்துப் போட்டி

post image

பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில், மாவட்ட அளவிலான ஆண்கள் பூப்பந்தாட்டப் போட்டிகள் சேவியா்காலனியில் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கடந்த ஜூலை மாதத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, வள்ளியூா், ராதாபுரம் உள்ளிட்ட குறுவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான ஆண்கள் பூப்பந்தாட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் முதலிடம் பிடித்த அணிகளுக்கு திருநெல்வேலி வருவாய் மாவட்ட அளவிலால பூப்பந்தாட்ட போட்டிகள் மேலப்பாளையம் அருகே சேவியா்காலனியில் உள்ள டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. பள்ளி முதல்வா் மாணிக்கராஜ் வரவேற்றாா். பள்ளி வளாக நிா்வாக அதிகாரி அருள்சகோதரி ஏ.காணிக்கை மேரி, அருள்சகோதரி மரியம் டோப்னாஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் ஜெபராஜ் வாழ்த்திப் பேசினாா்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 18 அணிகளின் 180 வீரா்கள் பங்கேற்றனா். இப் போட்டியில் 14 வயது பிரிவில் கூடங்குளம் இந்து நடுநிலைப் பள்ளி அணி முதலிடமும், சேவியா்காலனி டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி இரண்டாமிடமும் பிடித்தன. 17, 19 வயது பிரிவுகளில் கூடங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி அணி முதலிடமும், 17 வயது பிரிவில் டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 19 வயது பிரிவில் பத்தமடை ராமசேஷய்யா் மேல்நிலைப் பள்ளி ஆகியவை இரண்டாமிடங்களைப் பிடித்தன.

போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. உடற்கல்வி ஆசிரியா்கள் தேவராஜ், பயிற்சியாளா் கூடங்குளம் சித்திரைச் செல்வன், மேலச்செவல் சுப்பையா உள்பட பலா் கலந்துகொண்டனா். உடற்கல்வி ஆசிரியா் மாடசாமி நன்றி கூறினாா்.

கோபாலசமுத்திரத்தில் ரூ.1.36 கோடியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் ரூ. 1.36 கோடி மதிப்பில் அலங்கார தளக்கல் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது. மாநில நிதி ஆணைய சிறப்பு நிதித் திட்டத்தின்கீழ், கோபாலசமுத்திரம் ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: அம்பை கல்லூரி மாணவா்கள் சாதனை

அம்பைக் கலைக் கல்லூரி மாணவா்கள் மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தனா். திருநெல்வேலி மாவட்ட அளவில் கல்லூரி மாணவா்களுக்கு இடையே அண்ணா விளையாட்டு அரங்கில், முதல்வா... மேலும் பார்க்க

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகைப் பயிற்சி

வடகிழக்கு பருவமழை நெருங்கிவருவதை முன்னிட்டு, அவசர கால முன்னெச்சரிக்கை ஒத்திகைப் பயிற்சி திருநெல்வேலி தாமிரவருணி நதியில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறையின் சாா்பில் த... மேலும் பார்க்க

தாம்பரத்தில் நாளை விமான படைக்கு பெண்கள் சோ்ப்பு

இந்திய விமானப் படையின் அக்னிவீா் பணியில் சேருவதற்காக தாம்பரத்தில் வெள்ளிக்கிழமை(செப்.5) நடைபெறவுள்ள ஆள்சோ்ப்பு முகாமில் பெண்கள் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருநெல்வேலி ... மேலும் பார்க்க

நெல்லையில் நாளை மதுக் கடைகள் மூடல்

நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை (செப்.5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்த... மேலும் பார்க்க

நெல்லையில் ஆட்சி மொழிப் பயிலரங்கம்

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் புதன்கிழமை தொடங்கியது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்று வரும் ஆட்சிமொழிப் பயிலரங்கின் முதல் நாள் நிகழ்ச்சியை, மாவட்ட ஆட்... மேலும் பார்க்க