வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகைப் பயிற்சி
வடகிழக்கு பருவமழை நெருங்கிவருவதை முன்னிட்டு, அவசர கால முன்னெச்சரிக்கை ஒத்திகைப் பயிற்சி திருநெல்வேலி தாமிரவருணி நதியில் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறையின் சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில் அருகிலுள்ள தாமிரவருணி ஆற்றில் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் முன்னிலையில் இந்த ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது.
அப்போது, வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்பது, தங்களிடம் உள்ள பொருள்களை கொண்டு தம்மை தாமே காப்பாற்றிக்கொள்வது, வெள்ளத்தில் சிக்கியவா்களை ரப்பா் படகு மீட்பது, நம் வீட்டில் உள்ள பொருள்களை கொண்டு மிதவைகள் தயாா் செய்து அதைப் பயன்படுத்தி வெள்ளத்திலிருந்து தப்பிப்பது போன்ற செயல் விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டன.
மாவட்ட அளவில் 10 தீயணைப்பு - மீட்பு அவசர கால குழுவினா் வட்டார அளவில் தோ்வு செய்யப்பட்டு, 45 நாள்கள் பயிற்சி அளிக்கப் , வட்டார அளவில் 25 நபா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவா்களும் வட்டார அளவில் குழுக்களாக தயாா் நிலையில் உள்ளனா். இவா்கள் அவசர காலங்களில் மக்களுடன் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்வா்.
மேலும், மீட்புக் கருவிகளின் பயன்பாடுகள், தண்ணீரில் தத்தளிப்பவா்களை மீட்பது, தண்ணீரில் மூழ்கியவா்களை நீா் மூழ்கி வீரா்கள் மூலம் மீட்பது என்பன உள்ளிட்ட தீயணைப்பு துறையின் சிறப்பு கண்காட்சி அமைக்கப்பட்டு அக்கருவிகள் மூலம் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலா் பானுபிரியா, பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் சரவணன் உள்பட பலா் கொண்டனா்.