செய்திகள் :

டிரம்ப்பின் காலக்கெடுவை மோடி ஏற்பார்! ராகுல் கேலி!

post image

அமெரிக்கா விதித்த காலக்கெடுவுக்குள் பிரதமர் நரேந்திர மோடி வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வார் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இந்தியாவுடன் பெரியளவிலான ஒப்பந்தம் மேற்கொள்ளப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்திருந்தார். ஆனால், விவசாயம் மற்றும் பால்வளத் துறையில் சந்தையைத் திறந்துவிட டிரம்ப் தொடர்ந்து கோரிவருவதால், இரு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத்துக்கு இழுபறி ஏற்பட்டு வருகிறது.

ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ``குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெரிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற அவசரத்தில் ஒன்றும் இந்தியா செயல்படவில்லை. இரு நாடுகளும் பயன்பெறும் வகையில்தான், முடிவுகள் ஏற்றுக் கொள்ளப்படும்’’ என்று கூறினார்.

இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் என்ன வேண்டுமானாலும் கூறட்டும். ஆனால், டிரம்ப்பின் காலக்கெடுவை பிரதமர் மோடி ஏற்றுக் கொள்வார் என்று பதிவிட்டுள்ளார்.

மற்ற நாடுகளைப்போல அல்லாமல், இந்தியாவில்தான் விவசாயத் துறையில் 40 சதவிகித மக்கள் பணிபுரிகின்றனர். அதுமட்டுமின்றி, உணவுப் பாதுகாப்புத் தரங்களையும் இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும்.

ஏனெனில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை இறக்குமதி செய்ய, இந்திய அரசு தயாராக இல்லை. அவை இந்தியாவின் பூர்விக விதைகளுடன் மகரந்தச் சேர்க்கை ஏற்படும் அபாயங்களும் உள்ளன.

இந்தியாவில் உணவில் உணர்ச்சி மற்றும் நம்பிக்கைகள் தொடர்பானவை உள்ளன. ஆகையால், தனது விவசாயத் துறையை பாதுகாப்பதற்காக, அமெரிக்காவுக்கு இறக்குமதி வரிகளை விதிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

Rahul Says PM Will Bow to Trump Before Deadline

கைப்பேசி தொலைந்ததால் ஏற்பட்ட வாக்குவாதம்: நண்பரை 5-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த நபர் கைது

கைப்பேசி காணாமல் போனது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் நண்பரை கட்டடத்தின் 5ஆவது மாடியில் இருந்து தள்ளி கொலை செய்த நபரைக் போலீஸார் கைது செய்தனர். உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆக்ரா மாவட்டத்தைச் சேர்ந்த ஆ... மேலும் பார்க்க

இந்தியாவில் ஏழைகள் அதிகரிப்பு! உலக வங்கிக்கு எதிராக மத்திய அமைச்சர் பேச்சு!

இந்தியாவில் வருமான சமத்துவம் முன்னேறி வருவதாக உலக வங்கி அறிக்கைக்கு எதிர்மாறாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து தெரிவித்துள்ளார்.நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் ... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்த முன்னாள் குடியரசு துணைத் தலைவர் பேரன்!

முன்னாள் குடியரசு துணைத் தலைவரும் மறைந்தவருமான கிருஷண்காந்தின் பேரன் விராட் காந்த் பாஜகவில் இணைந்தார்.தில்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் கட்சியின் தேசிய பொதுச்செயலர் தருண் சுக், பஞ்சாப் பாஜக தலைவர் சுன... மேலும் பார்க்க

தொழிலாளர்களின் தினசரி வேலைநேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு! தெலங்கானா அரசு உத்தரவு

தெலங்கானாவிலும் நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை என்கிற முறை அமலாகிறது.தெலங்கானா அரசு சனிக்கிழமை(ஜூலை 5) பிறப்பித்துள்ள உத்தரவில் வணிக நிறுவனங்களில்(கடைகளுக்குப் பொருந்தாது) தொழிலாளர்களின் வேலை நேரம் நா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியின் ஒரு சுவரில் பெயின்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்; 4 கதவுகளுக்கு 425 பேர்!

மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளிகளில் பெயின்ட்டுக்காக செலவிடப்பட்டதாக வெளியிடப்பட்ட கட்டண விவரங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது.மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் ஷாஹ்தோல் மாவட்டம், சாகண்டி கிராமத்தில் ஓர் ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: பயணி தவறவிட்ட ரூ.3.2 லட்சம் பணத்தை ஒப்படைத்த ரயில்வே போலீஸார் !

மகாராஷ்டிரத்தில் உள்ளூர் ரயிலில் பயணி தவறவிட்ட பையை மீட்டு அதன் உரிமையாளருக்கு திருப்பி அனுப்பியதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் சுக்லா (30) சர்ச்கேட் செல்... மேலும் பார்க்க