செய்திகள் :

டிரம்ப்பின் 50% வரி விதிப்பால் இந்தியா, ரஷியா, சீனா கைகோக்கும்! ஜான் போல்டன் எச்சரிக்கை

post image

இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50% வரி விதித்து உத்தரவிட்டிருப்பதால் ரஷியா, சீனாவுடன் இந்தியா நெருக்கமாகும் என்றும் அமெரிக்கா மோசமாக பாதிக்கப்படக்கூடும் என்றும் முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் எச்சரித்துள்ளார்.

இது குறித்து ஜான் போல்டன் குறிப்பிட்டுள்ளவை:

“இந்தியாவை அமெரிக்காவுக்கு மேலும் நெருக்கமாக்குவதற்கு பதிலாக, சீனா மீது தளர்வான போக்கிலும், இந்தியா மீது கடும் வரி விதிப்பையும் உள்ளடக்கிய டிரம்ப்பின் இந்த நடவடிக்கையானது, ’ரஷியா, சீனாவிடமிருந்து இந்தியாவை விலக்க’ கடந்த இத்தனை ஆண்டுகளாக அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளை வலுவிழக்கச் செய்துள்ளது.”

“ரஷியாவை காயப்படுத்துவதாகக் கருதி இந்தியா மீது ஏற்கெனவே விதித்திருந்த வரியுடன் அபராதமாக கூடுதல் வரி விதிக்கப்பட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது. இந்த நடவடிக்கை இந்தியாவை ரஷியா, சீனாவுக்கு நெருக்கமாக்கும். இதன்மூலம், அவர்கள் ஒன்றிணைந்து அமெரிக்காவுக்கு எதிராக பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் வழிவகுக்கும்.

அமெரிக்காவின் நெடுங்கால வெளியுறவுக் கொள்கைகளுடன் இந்த நடவடிக்கை ஒத்துப்போகவில்லை. நட்புறவு நாடுகளையும் எதிரிகளுக்கும் ஒரே விதமாக வரி விதிப்பதா? டிரம்ப் செய்திருப்பது மிகப்பெரிய தவறு. அமெரிக்காவையே திரும்ப பாதிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்காவில் 50 சதவீத வரி விதிப்பு ஆக. 27-ஆம் தேதியிலிருந்து அமலாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஆகஸ்ட் 31 - செப்டம்பா் 1-ஆம் தேதிகளில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வாா் என வெளியாகியுள்ள அறிவிப்புக்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது. அப்போது சீன அதிபா் ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்களையும் அவா் சந்தித்துப் பேசுவாா் எனத் தெரிகிறது.

 Instead of drawing India closer, the tariffs have pushed New Delhi further away, weakening years of American attempts to distance India from Russia and China: Former US National Security Advisor John Bolton said

“காஸாவில் எப்போது சண்டையை நிறுத்துவீர்கள்?” -இஸ்ரேலில் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

காஸாவில் உடனடியாக சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.காஸா சிட்டி முழுவதையும் படை பலத... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளால் பாகிஸ்தானுக்கு இரண்டே மாதங்களில் ரூ.123 கோடி இழப்பு!

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளால் பாகிஸ்தானுக்கு இரண்டே மாதங்களில் ரூ.123 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.பாகிஸ்தான் விமானநிலையங்கள் நிர்வாகம் (பிஏஏ) ரூ. 123 கோடி இழப்பை சந்தித்துள்ளது. இதற்கான மு... மேலும் பார்க்க

பாலஸ்தீன பீலே கொலை..! யுஇஎஃப்ஏவை விமர்சித்த சாலா!

பாலஸ்தீன பீலே எனப்படும் கால்பந்து வீரர் சுலைமான் அல்-ஒபெய்டு இஸ்ரேலிய தாக்குதலில் பலியானதுக்கு பதிவிட்ட யுஇஎஃப்ஏவை பிரபல கால்பந்து வீரர் முகமது சாலா விமர்சித்துள்ளார். தெற்கு காஸாவில் மனிதாபிமான உதவிக... மேலும் பார்க்க

காஸா பட்டினிச் சாவு எண்ணிக்கை 212-ஆக உயா்வு

இஸ்ரேலின் முற்றுகையால் காஸாவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 212-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ... மேலும் பார்க்க

ரஷியாவின் முதல் துணைப் பிரதமருடன் அஜீத் தோவல் சந்திப்பு

ரஷியாவின் முதல் துணைப் பிரதமா் டெனிஸ் மான்டுரோவை தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ரஷிய தலைநகா் மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடா்பாக ஆலோசனை மேற்கொண்டாா். ரஷியா... மேலும் பார்க்க

நாகசாகி அணுகுண்டுத் தாக்குதல் நினைவுநாள்

ஜப்பானின் நாகசாகி நகரம் மீது அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதலின் 80-ஆவது ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமைகளில் கடைப்பிடிக்கப்பட்டது. இதற்காக அந்த நகரில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் 95 நாடுகளைச... மேலும் பார்க்க