செய்திகள் :

டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு! - பாகிஸ்தான் ராணுவத் தளபதி பரிந்துரை

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனிர் வலியுறுத்தியுள்ளார்.

5 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் அமெரிக்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றார். அவருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், பூட்டிய அறையில் நேற்று மதிய உணவு விருந்து அளித்தார்.

இந்தச் சந்திப்புகள் குறித்த தெளிவான தகவல்கள் வெளியாகாத நிலையில், அசிம் முனீரைச் சந்திப்பதற்காகவே ஜி7 மாநாட்டில் இருந்து அதிபர் டிரம்ப் பாதியில் கிளம்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற கடுமையான போரை தடுத்ததற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அன்னா கெல்லி தெரிவித்துள்ளார்.

ஆயுதக் கட்டுப்பாடு, அமைதிப் பேச்சுவார்த்தை, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளில் சிறந்து விளங்குவபர்களை கௌரவிப்பதற்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதனால், இருநாட்டுப் போரை நிறுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு வழங்கவேண்டும் என அசிம் முனீர் கோரிக்கை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பஹல்காம் தாக்குதலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட்டதால் மட்டுமே இந்தப் போர் முடிவுக்கு வந்ததாக வெள்ளை மாளிகையும் தெரிவித்துவருகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் செல்லுமிடமெங்கும் இதுவரை கிட்டத்தட்ட 15 முறைக்கு இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகக் கூறிவருகிறார். ஆனால், நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பேசிய பிரதமர் மோடி, “யாருடைய சமரசத்தையும் இந்தியா ஏற்காது” எனத் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், வெளியுறவுக் கொள்கை ஆய்வாளர்கள், இந்த சந்திப்பில் டிரம்ப்பின் நோபல் பரிசுக்கான முக்கியத்துவத்தைவிட வேறு விஷயங்கள் இருப்பதாக கருதுகின்றனர்.

தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் ராஜதந்திரங்கள் தோல்வியடைந்தால் ராணுவத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற சந்தேகங்கள் அதிகரித்துள்ளன.

இதையும் படிக்க |உ.பி. முதல் தெஹ்ரான் வரை... கொமேனியின் மூதாதையர் இந்தியர்களா? பின்னணி என்ன?

அமெரிக்கா: புரட்சிகர எய்ட்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி

எய்ட்ஸ் நோயை உருவாக்கும் ஹெச்ஐவி தீநுண்மியிடமிருந்து 99.9 சதவீதம் பாதுகாப்பு வழங்கும் புரட்சிகர ஊசி மருந்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அனுமதி அளித்துள்ளது. உயிா்க் க... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தத்தை இந்தியா-பாகிஸ்தான் தலைவா்கள்தான் தீா்மானித்தனா்: முதல்முறையாக ஒப்புக்கொண்டாா் டிரம்ப்

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நான்தான் நிறுத்தினேன்’ என்று கூறிவந்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ‘சண்டை நிறுத்தத்தை இரு நாட்டுத் தலைவா்கள்தான் தீா்மானித்தனா்’ என்று முதல்முறையாக புதன்கிழமை ஒப்புக்க... மேலும் பார்க்க

வெளிநாட்டு வங்கிகளிடம் இருந்து பாகிஸ்தான் ரூ.8,600 கோடி கடன்

வெளிநாட்டு வங்கிகளிடம் இருந்து நூறு கோடி அமெரிக்க டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.8,600 கோடி) கடன் வாங்கும் ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையொப்பமிட்டுள்ளது. பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசமாக உள்ளதால், ... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்க வெள்ளம்: உயிரிழப்பு 92-ஆக உயா்வு

தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 92-ஆக உயா்ந்துள்ளது. கிழக்கு கேப் மாகாணத்தில் அளவுக்கு அதிகமாக கடந்த வாரம் பெய்த பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற... மேலும் பார்க்க

தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்: புதின், ஷி ஜின்பிங் கூட்டாக வலியுறுத்தல்

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் வியாழக்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தனா். மேலும், தாக்குதலை உடனடியாக இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்றும் ... மேலும் பார்க்க

‘கமேனி இனியும் உயிருடன் இருக்கக் கூடாது’

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிருடன் இருப்பதை இனியும் அனுமதிக்க முடியாது என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் வியாழக்கிழமை கூறினாா். ஈரான் வீசிய ஏவுகணை தெற்கு இஸ்ரேலில் உள்ள ச... மேலும் பார்க்க