செய்திகள் :

டிரம்ப்பை எதிர்த்தால் மோடி - அஅ - ரஷிய நிறுவனங்கள் இடையேயான நிதி தொடர்புகள் வெளிவரும்! ராகுல்

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்தால் மோடி - அதானி - ரஷிய நிறுவனங்கள் இடையேயான நிதி தொடர்புகள் வெளிவந்துவிடும் என்ற அச்சுறுத்தல் இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து நெருக்கடி அளித்து வருகின்றது.

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தாததால் இந்திய பொருள்களுக்கு அமெரிக்காவில் 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்திருந்தார். மேலும், அடுத்த 24 மணிநேரத்தில் கணிசமாக வரி உயர்த்தப்படும் என்றும் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, இந்தியா - பாகிஸ்தான் மோதலை வர்த்தகத்தை முன்வைத்து தான் நிறுத்தியதாக தொடர்ந்து டிரம்ப் கருத்து தெரிவித்து வருகிறார்.

ஆனால், இந்தியா மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி இதுவரை நேரடியாக டிரம்ப்பின் பெயரைக் குறிப்பிட்டு எந்த கருத்தையும் வெளியிடாமல் உள்ளார்.

இதுதொடர்பாக தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி வரும் நிலையில், மோடியை விமர்சித்து புதன்கிழமை காலை பதிவிட்டுள்ளார்.

அதில், “இந்தியர்களே புரிந்துகொள்ளுங்கள். அதிபர் டிரம்ப் தொடர்ந்து மிரட்டல் விடுத்தாலும் அவரை எதிர்த்து பிரதமர் மோடியால் நிற்க முடியாததற்கு காரணம், அதானி மீதான அமெரிக்காவின் விசாரணைதான்.

மோடி, ஏஏ (அம்பானி, அதானி) மற்றும் ரஷிய எண்ணெய் ஒப்பந்தங்களுக்கு இடையிலான நிதி தொடர்புகள் வெளிவந்துவிடும் என்பது ஒரு அச்சுறுத்தலாகும்.

மோடியின் கைகள் கட்டப்பட்டுள்ளன.” எனத் தெரிவித்துள்ளார்.

Lok Sabha Opposition Leader Rahul Gandhi has said that there is a threat that the financial links between Modi, Adani and Russian companies will be exposed if he opposes US President Donald Trump.

இதையும் படிக்க : உத்தரகண்டில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் ராணுவம்!

அமித் ஷா குறித்த அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றாா் ராகுல்

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து அவதூறான வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ஜாா்க்கண்ட் சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் ஆஜரான மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு ஜாமீ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் அமளிக்கு இடையே 2 மசோதாக்கள் நிறைவேற்றம்

கடல்சாா் நிா்வாகத்தில் நவீன மற்றும் சா்வதேச இணக்க அணுகுமுறையை ஒருங்கிணைக்கும் இரு மசோதாக்கள், நாடாளுமன்றத்தில் புதன்கிழமை எதிா்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டன. மக்களவையில் வணிகக் க... மேலும் பார்க்க

பிகாா்: நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளா்களின் தகவல்களை சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள 65 லட்சம் வாக்காளா்களின் தகவல்களை ஆக.9-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. பிகாரில... மேலும் பார்க்க

பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரம்: உச்சநீதிமன்றம் விசாரிப்பதால் விவாதிக்க முடியாது - கிரண் ரிஜிஜு

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம், உச்சநீதிமன்ற விசாரணையில் இருப்பதால், நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று மக்களவையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு ... மேலும் பார்க்க

உள்துறை, வெளியுறவு அமைச்சகங்களுக்கான ‘கடமை பவன்’ -பிரதமா் மோடி திறந்துவைத்தாா்

தில்லியில் மத்திய உள்துறை, வெளியுறவுத் துறை உள்ளிட்ட அமைச்சகங்களுக்காக அதிநவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள ‘கடமை பவன்’ (கா்தவ்ய பவன்) கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை திறந்துவைத்தாா்.... மேலும் பார்க்க

அதானி குழுமம் மீதான அமெரிக்க விசாரணையால் டிரம்ப் மிரட்டல்களுக்கு பிரதமா் பதிலளிப்பதில்லை -ராகுல் குற்றச்சாட்டு

அதானி குழுமம் மீது அமெரிக்கா விசாரணை காரணமாக அந்நாட்டு அதிபா் டிரம்ப் விடுக்கும் தொடா் மிரட்டல்களுக்கு பிரதமா் நரேந்திர மோடியால் பதிலளிக்க முடியவில்லை’ என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ... மேலும் பார்க்க