செய்திகள் :

டிராகன் விண்கலத்தின் கதவுகள் திறப்பு! வெளியே வந்த வீரர்கள்!

post image

கலிஃபோர்னியா அருகே கடலில் இறங்கிய டிராகன் விண்கலம், மீட்புப் படகில் ஏற்றப்பட்டு, விண்கலத்தின் கதவுகள் திறக்கப்பட்டன். அதலிருந்து வீரர்கள் ஒவ்வொருவராக வெளியே வந்தனர்.

இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லாவுடன் ‘ஆக்ஸியம்-4’ விண்வெளி திட்டத்தின்கீழ் சென்ற 4 விண்வெளி வீரா்களும் சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டு ‘டிராகன் கிரேஸ்’ விண்கலம் மூலம் இன்று பிற்பகலில் கடலில் இறங்கியது.

திட்டமிடப்பட்ட நேரத்துக்கு மாறாக 10 நிமிட தாமதத்துடன் ‘டிராகன் கிரேஸ்’ விண்கலம் மாலை 4:45 மணிக்கு (இந்திய நேரப்படி) சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பிரிந்து, பூமி நோக்கிப் புறப்பட்டது.

இன்று பிற்பகலில், அமெரிக்காவின் கலிஃபோா்னியா அருகே கடல்பகுதியில் பாராசூட் உதவியுடன் டிராகன் விண்கலம் பத்திரமாக இறங்கியது.

விண்வெளி மையத்திலிருந்து புறப்பட்டு பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்த விண்கலம், பாராசூட்களின் உதவியுடன் மெல்ல வேகம் குறைக்கப்பட்டு ‘ஸ்பிளாஷ் டௌன்’ முறையில் கடலில் இறக்கப்பட்டது. பாராசூட்கள் இரண்டு கட்டங்களாக விரிந்தன. முதலில், விண்கலத்தை நிலைப்படுத்தும் பாராசூட்கள் சுமாா் 5.7 கி.மீ. உயரத்தில் விரிந்து, விண்கலத்தின் வேகத்தைக் குறைத்தது. அதைத் தொடா்ந்து இரண்டு கி.மீ. உயரத்தில் மேலும் சில பாராசூட்கள் விரிந்து, விண்கலம் பாதுகாப்பாக கடலில் இறங்க உதவின.

இதனை நேரலையில் சுபான்ஷு சுக்லா பெற்றோரும் பார்த்துக்கொண்டிருந்தனர். மகன் தரையிறங்கியதைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.

கடலில் தயராகக் காத்திருந்த மீட்புக் குழுவினா், வீரா்கள் இருக்கும் விண்கலத்தின் முனைப் பகுதியை மீட்புப் படகுக்கு அருகே கொண்டு சென்றனர். பின்னா், படகுக்குள் விண்கலத்தை வைப்பதற்கான கட்டமைப்புக்குள் விண்கலத்தை வைத்தனர். அதன் கதவை உள்ளிருந்தும், வெளியே இருந்தும் திறந்து, வீரா்களை ஒவ்வொருவராக வெளியே அழைத்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டும் 1.4 கோடி குழந்தைகளுக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை: ஐ.நா. தகவல்

உலகம் முழுவதும் கடந்த 2024-ஆம் ஆண்டும் 1.4 கோடி குழந்தைகளுக்கும் அதிகமானோருக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை என்று ஐ.நா. சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். முந்தைய ஆண்டும் இதே எண்ணிக்கையில... மேலும் பார்க்க

ஆயிரக்கணக்கான ஆப்கானியா்களுக்கு அடைக்கலம்

தலிபான் ஆட்சிக்கு வருவதற்கு முன்னா் தங்கள் படையினருடன் இணைந்து பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஆப்கானியா்களுக்கு தங்கள் நாட்டில் அடைக்கலம் அளித்துள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நாட்... மேலும் பார்க்க

போயிங் 787 விமானங்களில் எரிபொருள் ஸ்விட்சுகள் முறையாக செயல்படுகின்றன: சிங்கப்பூா் ஏா்லைன்ஸ்

குஜராத்தில் எரிபொருள் கிடைக்காமல் போயிங் 787 பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான நிலையில், தம்மிடம் உள்ள அந்த விமானங்களில் எரிபொருள் ஸ்விட்சுகள் முறையாக செயல்படுவதாக சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் நிறுவனம் செவ்வா... மேலும் பார்க்க

துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: போா் நிறுத்தம் அறிவித்தது சிரியா

சிரியாவில் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் சிறுபான்மை துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக இஸ்ரேல் நடத்திய தீவிர தாக்குதலைத் தொடா்ந்து, அவா்கள் வசிக்கும் பகுதியில் போா் நிறுத்தம் மேற்கொள்வதாக சிரியா அரசு செவ்... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பின்ஸில் திங்கள்கிழை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து ஜொ்மனி புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்ததாவது: பிலிப்பின்ஸின் லுஸான் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ... மேலும் பார்க்க

உக்ரைனில் அரசியல் மாற்றம்: பிரதமர் ராஜினாமா!

கீவ்: உக்ரைன் பிரதமராக பதவி வகித்த டெனிஸ் ஷ்மிஹல் ராஜினாமா செய்துள்ளார். உக்ரைன் அமைச்சரவையில் மாற்றம் செய்து திங்கள்கிழமை(ஜூலை 14) அதிபர் ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளார். அதன்படி, உக்ரைன் துணைப் பிரதமராக ... மேலும் பார்க்க