டெய்லர் முதல் யூடியூபர் வரை.. உளவாளிகளுக்கான உக்திகளை மாற்றியிருக்கும் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ!
புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் அதிரடித் தாக்குதலைத் தொடர்ந்து, நாட்டுக்குள் இருந்துகொண்டு, பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்ததாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பஞ்சாப் காவல்துறை தரப்பில் செருப்புத் தொழிலாளி முதல் டெய்லர் மற்றும் சிம் கார்டு விற்பனையாளர் வரை பலரை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு ரகசிய தகவல்களை அளித்ததாகக் குற்றம்சாட்டி கைது செய்திருக்கிறது.