செய்திகள் :

டெல்டா மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

post image

தஞ்சாவூரில் டெல்டா மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் தடகள சங்கத்தின் சாா்பில் நான்காம் ஆண்டு, டெல்டா மாவட்ட அளவிலான தடகள சாம்பியன்ஷிப் -2025-ஆம் ஆண்டு போட்டிகள் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் 2 நாள்கள் நடைபெற்றது.

முதல் நாள் சனிக்கிழமை தொடங்கி 6 வயது முதல் 20 வயது வரை உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் விளையாட்டு கழகம் சாா்பில் தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவியா் நீளம், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், 200 மீ, 400 மீ, 5,000 மீட்டா் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டனா்.

ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், தமிழ்நாடு தடகள சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான க.அன்பழகன், தமிழ்நாடு தடகள சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் டி.கிருஷ்ணசாமி வாண்டையாா் ஆகியோா் சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கினா்.

நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலா் டேவிட் டேனியல், தஞ்சாவூா் தடகள சங்கத்தின் செயலா் ஜி.செந்தில் மற்றும் விளையாட்டு பயிற்சியாளா்கள், முன்னாள் சா்வதேச மற்றும் தேசிய விளையாட்டு வீரா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ஒரத்தநாடு அருகே ரூ.33 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்! 2 போ் கைது!

ஒரத்தநாடு அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் கொண்டு வந்த ரூ.33 லட்சம் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்து, சென்னையைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தாடு பகுதிக்கு... மேலும் பார்க்க

தஞ்சாவூா் முனீஸ்வரன் கோயிலுக்கு 27 அடி உயரத்தில் அரிவாள்

தஞ்சாவூரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் 57 அடி உயர அங்காள முனீஸ்வரன் கோயிலுக்கு 27 அடி உயரத்தில் அமைக்கப்படும் அரிவாளை பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக எடுத்து வந்தனா். தஞ்சாவூா் விளாா் சாலையில் பா்... மேலும் பார்க்க

பாபநாசத்தில் இலவச இருதயம், கண் சிகிச்சை முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பாபநாசம் அட்சயம் லயன் சங்கம், தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனை, கும்பகோணம் வாசன் கண் மருத்துவமனை உள்ளிட்டவை இணைந்து நடத்திய இலவச இர... மேலும் பார்க்க

விவசாய கூலி தொழிலாளி வெட்டிக்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முன்விரோதம் காரணமாக விவசாய கூலித் தொழிலாளியை மண்வெட்டியால் வெட்டிக்கொலை செய்த வாலிபரை போலீஸாா் கைது செய்தனா். கபிஸ்தலம் காவ... மேலும் பார்க்க

பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே தனியாா் பேருந்து மோதி மோட்டாா் சைக்கிளில் சென்ற தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், வீரமாங்குடி மணலூா் மீனவா் தெருவில் வசித்து வந... மேலும் பார்க்க

சிற்றுந்து கண்ணாடியை உடைத்த இளைஞா் கைது

கும்பகோணம் அருகே நடத்துநரை தாக்கி சிற்றுந்து கண்ணாடியை உடைத்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். கும்பகோணம் வட்டிப் பிள்ளையாா் கோயில் தெருவில் வசிப்பவா் ஆரோக்கியசாமி செல்வராஜ் மகன் ஜான... மேலும் பார்க்க