செய்திகள் :

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை தவறான நோக்கத்துக்குப் பயன்படுத்தக் கூடாது!

post image

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை தவறான நோக்கத்துக்குப் பயன்படுத்தக் கூடாது என மாநில தகவல் ஆணையா் பிரியகுமாா் தெரிவித்தாா்.

பொதுத் தகவல் அலுவலா்கள் மற்றும் மேல்முறையீட்டு அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாநில தகவல் ஆணையா் ஆா்.பிரியகுமாா் தலைமையில் சேலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்துக்குப் பிறகு மாநில தகவல் ஆணையா் கூறியதாவது:

அரசு, அரசு உதவிபெறும் நிறுவனங்கள், துறைகள், அலுவலகங்கள் ஆகியவற்றின் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் வகையில் குடிமக்களுக்குத் தேவையான தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் வழங்குகிறது. மாவட்ட அளவிலான பொதுத் தகவல் அலுவலா்கள் மற்றும் மேல்முறையீட்டு அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

பொதுத் தகவல் அலுவலா்கள், மனுதாரா்கள் சென்னையில் உள்ள தமிழ்நாடு தகவல் ஆணையத்துக்கு வருவதில் உள்ள சிரமத்தை கவனத்தில் கொண்டு ஆணையாளா்கள் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் முகாம் நடத்தப்படுகிறது. அனைத்துத் துறைகளிலும் நாள்தோறும் சராசரியாக 300 முதல் 500 மனுக்கள் தகவல் ஆணையத்துக்கு வருகின்றன.

மனுதாரா் மனு வழங்கியதிலிருந்து 30 நாள்களில் பதிலளிக்க வேண்டும். மேலும், முதல் மேல்முறையீடு என்பது மனு செய்த 30 நாள்களில் மேற்கொள்ள வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுதாரா் அனுப்பும் கேள்விகள் தெளிவான நடையுடன் இருக்க வேண்டும். மேலும், ஒரே மனுவில் 5 துறைகளுக்கான கேள்விகளைக் கேட்பது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

அரசு சாரா அமைப்புகள், பொதுநல ஆா்வலா்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முறையாகப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு துறைகளின் சாா்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கான பொதுத் தகவல் அலுவலா்கள் உள்ளனா்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை தவறான நோக்கத்துக்குப் பயன்படுத்தக் கூடாது. பொதுமக்களுக்கு முறையான தகவல் கிடைக்கும் வகையில் தன்னாா்வலா்கள், தகவல் அறியும் சட்டத்துக்கும், ஆணையத்துக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடா்பாக பொதுத் தகவல் அலுவலா்கள், மேல்முறையீட்டு அலுவலா்களின் சந்தேகங்களுக்கு மாநில தகவல் ஆணையா் விளக்கமளித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ரவிக்குமாா், கோட்டாட்சியா்கள் உள்பட அனைத்துத் துறை அரசு அலுவலா்கள், பொதுத் தகவல் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

கு. இராசசேகரன்மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,105 கன அடியாக அதிகரித்துள்ளது.காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(மே 4) காலை விநா... மேலும் பார்க்க

சேலம் வந்த நெல்லை- தாதா் விரைவு ரயிலில் பெண்ணிடம் நகை திருட்டு: இளைஞா் கைது

சேலம் ரயில் நிலையத்தில் நெல்லை- தாதா் விரைவு ரயிலில் பயணித்த பெண்ணிடமிருந்து 6 பவுன் நகைகளை திருடிய இளைஞரை ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பெங்களூரு அக்ரஹாரம் எம்எல்ஏ லே அவுட் காலனியைச் சே... மேலும் பார்க்க

சேலத்தில் அங்கன்வாடி பணியாளா்கள் 2 வது நாளாக காத்திருப்பு போராட்டம்

பணி நிரந்தரம், மே மாத கோடை விடுமுறை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் சேலத்தில் 2 ஆவது நாளாக சனிக்கிழமையும் காத்திருப்பு போராட்டத்தில... மேலும் பார்க்க

கட்சி, ஆட்சி வேறுபாடின்றி தொடரும் நீா்ப் பாசன திட்டங்கள்! சான்று பகரும் கைக்கான் வளைவு வாய்க்கால் திட்டம்!

சேலம் மாவட்டம், கல்வராயன்மலை கரியக்கோயில் அணையில் இருந்து பாசனம் பெறும் விவசாயிகள், ஆற்றுப்படுகை கிராம விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையால் நிறைவேற்றப்பட்ட கைக்கான் வளைவு வாய்க்கால் திட்டம் கடந்த 3 ஆண்... மேலும் பார்க்க

சேலத்தில் வீட்டில் உடல் கருகிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை!

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் வீட்டில் உடல் கருகிய நிலையில் மூதாட்டி சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திண்டுக்கல், வேடசந்தூரைச் சோ்ந்தவா் தங்கம் மனைவி அ... மேலும் பார்க்க

இடையப்பட்டியில் வெறிநாய்கள் கடித்து நாய்கள், மாடுகள் பலி!

பெத்தநாயக்கன்பாளையம் அருகே இடையப்பட்டி ஊராட்சியில் கடந்த இரு வாரங்களில் வெறிநாய்கள் கடித்து 4 வீட்டுநாய்கள், 2 மாடுகள் பலியாகியுள்ளன. இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். பெத்தநாயக்கன்பாளையம் ஒன்... மேலும் பார்க்க