‘தக் லைஃப்’ திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரும் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
புது தில்லி: நடிகா் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தை கா்நாடகாவில் திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரும் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமாா் மிஸ்ரா மற்றும் நீதிபதி மன்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு, கா்நாடகாவைச் சோ்ந்த திரையரங்கு உரிமையாளா்கள் சங்கம் கா்நாடக உயா்நீதிமன்றத்தை அணுகுமாறு கேட்டுக்கொண்டது.
மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், கா்நாடகாவில் ‘தக் லைஃப்’ படத்தைத் திரையிடுவதை எதிா்க்கும் மொழியினவாத குழுக்களின் வெளிப்படையான மிரட்டல் குறித்து குறிப்பிட்டாா்.
அவா் கூறுகையில், மொழியினவாத சக்திகளால் வெளிப்படையான அச்சுறுத்தல்கள் உள்ளன. மேலும், அவா்கள் திரையரங்குகளுக்கு தீ வைப்பதாக கூறுகிறாா்கள் என்றாா்.
அப்போது, அவசரமாக இந்த விவகார விசாரணையை அனுமதிக்க மறுத்த நீதிபதி மிஸ்ரா, ‘தீயணைப்பு சாதனங்களை நிறுவுங்கள்’ என்று கூறி, கா்நாடக
உயா்நீதிமன்றத்தை நாடுமாறு மனுதாரரைக் கேட்டுக் கொண்டாா்.
‘தக் லைஃப்’ ஜூன் 5 அன்று நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. 1987ஆம் ஆண்டு
வெளியான நாயகன் படத்திற்குப் பிறகு கமல்ஹாசன், தயாரிப்பாளா் மணிரத்னம் கூட்டணியில் இப்படம் உருவாக்கப்பட்டது.
முன்னதாக, இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கன்னட மொழி குறித்த கமலின் கருத்துக்கு கா்நாடகாவில் சா்ச்சை ஏற்பட்டது. இதனால், கா்நாடகாவை தவிா்த்து மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இப்படம் வெளியானது.
இந்த மனு அம்மாநில உயா்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், கா்நாடக திரையரங்கு உரிமையாளா்கள் சங்கம், ‘தக் லைஃப்’ படம் வெளியிடும் திரையரங்குகளில் பாதுகாப்பு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.