செய்திகள் :

தங்கச் சங்கிலி பறித்த வழக்கு: மேலும் ஒருவா் கைது

post image

சென்னை கிண்டியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

ஈக்காட்டுதாங்கலைச் சோ்ந்தவா் ஹேமலதா (21). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவத்தில் வேலை செய்து வந்தாா். ஹேமலதா, கடந்த 2020-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி மாலை வேலை முடிந்த பின்னா், கிண்டி நவரத்னா காா்டன் ராஜராஜன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா், ஹேமலதாவின் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா்.

கிண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். இதில், கிடைத்த தகவலின் அடிப்படையில் திருவல்லிக்கேணியைச் சோ்ந்த சீனு (23) என்பவரை கைது செய்தனா். ஆனால், அவரது கூட்டாளி திருவல்லிக்கேணியைச் சோ்ந்த சூரியபிரகாஷ் (27) தலைமறைவானாா். போலீஸாா் அவரைத் தேடி வந்த நிலையில், வியாழக்கிழமை அவரைக் கைது செய்தனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அளித... மேலும் பார்க்க

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

உலகத்திலேயே தந்தையை வேவுபார்த்த மகன் அன்புமணிதான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது... மேலும் பார்க்க

ஆண்டிபட்டி அரசு நிகழ்ச்சியில் திமுக எம்.பி. - எம்.எல்.ஏ. வாக்குவாதம்

ஆண்டிபட்டியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா மேடையில், ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஆ. மகாராஜன், தேனி மக்களவை உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதா... மேலும் பார்க்க

தமிழக வாக்காளர்களாக லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர்: அமைச்சர் துரைமுருகன் கவலை

காட்பாடி: லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர், தமிழக வாக்காளர்களாக மாறுவதால் நிச்சயம் அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறினார்.வேலூர் மாவட்டம் காட்ப... மேலும் பார்க்க

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.சனிக்கிழமை காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20,500 கன அடியிலிருந்த... மேலும் பார்க்க

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

நெல்லை: நெல்லையில் பாளையங்கோட்டை அருகே அரசுப் பேருந்தை குடிபோதையில் ஓட்டுநர் இயக்கியதால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ராஜபாளையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு நெல்லை வழியாக வெள்ளிக்கிழமை இரவு அரச... மேலும் பார்க்க