செய்திகள் :

தங்க கடத்தல்: நடிகை ரன்யா ராவ் மீது cofeposa சட்டத்தில் வழக்கு பதிவு! - விவரம் என்ன?

post image

நடிகை ரன்யா ராவ் கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தியதாக பெங்களூரு விமான நிலையத்தில் பிடிபட்டார். அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.12.56 கோடியாகும். விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கும் தனது தந்தையின் நண்பரின் உதவியோடு அடிக்கடி ரன்யா ராவ் தங்கம் கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. 2023-25ம் ஆண்டுகளில் துபாயில் இருந்து ரன்யா ராவ் 34 முறை தங்கத்தை இந்தியாவிற்கு கடத்தி வந்திருந்தது தெரிய வந்தது. அவரது வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதில் ரூ.2.06 கோடி மதிப்பு தங்கம் மற்றும், ரூ.2.67 கோடி மதிப்பு ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இத்தங்க கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட ரன்யா ராவ் சிறப்பு பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட், செசன்ஸ் கோர்ட் மற்றும் கர்நாட்கா உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

இதையடுத்து கைது செய்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறி ரன்யா ராவ், அவருடன் கைது செய்யப்பட்ட அமெரிக்க பிரஜை தருண் ராஜு மற்றும் ஜூவல்லர் சாஹில் ஜெயின் ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இரண்டு பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஆனால் அவர்கள் இருவர் மீதும் அன்னிய செலவாணி மற்றும் கடத்தல் தடுப்பு சட்டமான காபிபோசா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வருவாய் புலனாய்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள உத்தரவில், ரன்யா ராவ் மீது ஏப்ரல் 22ம் தேதியே காபிபோசா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே ஒரு ஆண்டுக்கு அவர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்ய முடியாது. அவர் ஒரு வருடம் சிறையில் இருந்த பிறகுதான் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்யமுடியும் என்று தெரிவித்துள்ளது.

ரன்யாவுடன் கைது செய்யப்பட்ட தருன் ராஜு தங்கம் கடத்தலுக்கு ரன்யாராவிற்கு உதவியாக இருந்தார். மற்றொரு குற்றவாளியாக கருதப்படும் சாஹில் ஜெயின் நடிகை ரன்யா ராவ் கடத்தி வரும் தங்கத்தை விற்பனை செய்யவும், ஹவாலா முறையில் பணத்தை மாற்றவும் உதவி செய்துள்ளார். காபிபோசா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதை நீட்டிப்பது குறித்து வருவாய் புலனாய்வு இயக்குனரகம் பின்னர் கூடி முடிவு செய்யும். காபிபோசா சட்டத்தின் கீழ் ரன்யா ராவ் கைது செய்யப்பட்டு இருப்பதை எதிர்த்து அவரது தாயார் ரோஹினி கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கழுத்தில் பாம்புடன் பைக் ஓட்டிய நபர்; விஷக்கடியால் உயிரிழப்பு - என்ன நடந்தது?

மத்திய பிரதேசத்தில் பல ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் நபரை அவர் பிடித்த பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மத்திய பிரதேச மாநிலம் ரகோகர் என்ற இடத்தில் வசிப்பவர் தீபக் மகாபர். அங்குள்ள பல்கலைக்கழகத்தி... மேலும் பார்க்க

Fahadh Faasil : `ஸ்மார்ட்போன் இல்ல, பட்டன் போன் தான்; விலை இத்தனை லட்சமா?’- வைரலான பஹத் பாசில் போன்

மலையாளம் கடந்து தன் நடிப்புத் திறமையால் இந்தியளவில் புகழ் பெற்றவர் நடிகர் பஹத் பாசில். தமிழில் 'மாரீசன்' பட வெளியீட்டுக்கு தயாராகி வருகிறார். இந்தப் படம் ஜூலை 25-ம் தேதி திரைக்கு வர உள்ளது. நடிகர் பஹத... மேலும் பார்க்க

மராத்திக்கு எதிரான பேசினாரா ராஜஸ்தான் இளைஞர்? அடித்து ஊர்வலமாகக் கூட்டிச் சென்ற ராஜ் தாக்கரே கட்சி

மகாராஷ்டிராவில் ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா கட்சியினர் மராத்திக்காகவும், மராத்தி மக்களுக்காகவும் குரல் கொடுத்து வருகின்றனர். மகாராஷ்டிராவில் வசிப்பவர்கள் கட்டாயம் மராத்தி பேச வேண்டும் என்ற... மேலும் பார்க்க

இங்கிலாந்து ஏலத்தில் விற்கப்பட்ட மகாத்மா காந்தியின் எண்ணெய் ஓவியம்; எத்தனை கோடிக்குத் தெரியுமா?

மகாத்மா காந்தி வரைவதற்கு அவர் அமர்ந்த ஒரே ஓவியம் இதுதான் என்று நம்பப்படுகிறது. இந்த அரிய எண்ணெய் ஓவியம், இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் 175 கோடி ரூபாய்க்கு (சுமார் 17 மில்லியன் பவுண்டுகள்) விற்பனையாக... மேலும் பார்க்க

கைகொடுக்காத நீட்; 20 வயதில் Rolls Royce-ல் ரூ.72 லட்சம் சம்பளம்! - கிராமத்து மாணவி சாதித்தது எப்படி?

கர்நாடகா மாநிலம் தீர்த்தஹலி தாலுகாவில் கொடுருகிராமத்துப் பகுதியைச் சேர்ந்தவர் ரிதுபர்ணா. உயர்நிலைப் படிப்பு, PUC முடித்தவுடன் மருத்துவராகும் கனவுடன் நீட் தேர்வை எழுதியிருக்கிறார். ஆனால், நீட் தேர்வின்... மேலும் பார்க்க

`கயிறுக்கு முன்னால் ஊசலாடும் உயிர்' - மன்னிப்பா? மரணமா? - நிமிஷா பிரியாவின் வழக்கில் நடந்தது என்ன?

``எப்படி துருதுருனு திரிஞ்சிட்டு இருந்த புள்ள அது தெரியுமா... ட்ராக்டர் ஓட்டும், வயலுக்கு போயி விவசாய வேலைக்கூட பார்க்கும். படிப்புலயும், எதிர்காலம் பத்தின சிந்தனையும் ரொம்ப அதிக கவனமா இருப்பா. எப்படி... மேலும் பார்க்க