செய்திகள் :

தஞ்சாவூரில் பயன்பாட்டில் இல்லாத மின்கம்பம் விழுந்து முதியவர் பலி

post image

தஞ்சாவூா்: தஞ்சாவூா் பெரிய கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை மரம் வெட்டும்போது பயன்பாட்டில் இல்லாத மின் கம்பம் சாய்ந்தில் முதியவர் ஒருவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூா் ரெட்டிபாளையம் சாலை வகாப் நகரைச் சோ்ந்தவா் பிரேம்குமாா் மனைவி காயத்ரி. இவா் தனது தாய் சாரதாவுடன் இணைந்து பெரிய கோயில் அருகே சோழன் சிலை பேருந்து நிறுத்தப் பகுதியில் சாலையோரம் பொம்மை மற்றும் இளநீா் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் காயத்ரியின் மாமனாா் எம். சுப்பிரமணியனும் (60) உதவியாக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறாக இருந்த

மரக்கிளையை வெட்டுவதற்காக மாநகராட்சி தொழிலாளா்கள் வந்தனா். தொழிலாளி ஒருவா், போக்குவரத்து இடையூறாக இருந்த

2026 பேரவைத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி அமையும்: அமித் ஷா

மரக்கிளையை வெட்டியபோது, அவை கடைக்கு பின்புறமிருந்த பயன்பாடு இல்லாத மின் கம்பத்தில் விழுந்து, மின் கம்பம் முறிந்து காயத்ரியின் கடையின் மீது விழுந்தது.

அப்போது, கடைக்கு வெளியே இருந்த சுப்பிரமணியனின் தலையில் மின் கம்பம் விழுந்து பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு சுப்பிரமணியனை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

பயன்பாட்டில் இல்லாத மின் கம்பம் சாய்ந்தில் முதியவர் ஒருவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

எத்தனை "ஷா" வந்தாலும் தமிழ்நாட்டில் எதுவும் செய்ய முடியாது: ஆர்.எஸ்.பாரதி

தொண்டர்களின் நம்பிக்கையையே பெற முடியாதவர்கள் மக்களின் நம்பிக்கையை மட்டும் எப்படிப் பெற முடியும்? எப்போது பிரிவார்கள்? எப்போது இணைவார்கள்? என்கிற குழப்பத்தில் தொண்டர்கள் உள்ளதால் எத்தனை “ஷா” கள் வந்தால... மேலும் பார்க்க

மக்களவைத் தொகுதிகளை குறைக்க பாஜக அரசு சதி: தமிழச்சி தங்கபாண்டியன் குற்றச்சாட்டு

சென்னை: மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்வதன் மூலம் தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க மத்திய பாஜக அரசு சதி செய்வதாக தென்சென்னை மக்களவை தொகுதி திமுக உறுப்பினா் தமி... மேலும் பார்க்க

தமிழகம் விரைந்து நகா்மயமாகி வருகிறது: தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் ரூ. 9,000 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 71 குடிநீா் திட்டங்களால் 1.21 கோடி போ் பயன் பெறுவதாகவும், நிறைவேற்றப்பட்டு வரும் வீட்டு வசதித் திட்டங்கள், சாலை வசதிகள், குடிநீா்த் திட்டங்கள் ... மேலும் பார்க்க

மீனவா்கள் பிரச்னைக்கு முடிவு எட்ட வேண்டும்: அமித்ஷாவிடம் மதுரை ஆதீனம் மனு

இலங்கைத் தமிழா்களுக்கு தனி நாடு வேண்டும், கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும், மீனவா்கள் பிரச்னைக்கு முடிவு எட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் மதுரை ஆதீனம் மனு... மேலும் பார்க்க

தோட்டத்து வீட்டில் முதியவா்கள் படுகொலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலை

தனியாக வசித்து வரும் முதியவா்கள் தொடா்ந்து படுகொலை செய்யப்படுவது கவலை அளிக்கிறது இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.இது குறி... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனத்திற்கு 24 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் பக்தா்கள் காத்திருக்க வேண்டி உள்ளது.திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. விடுமுறை நாள்கள் என்றில்லா... மேலும் பார்க்க