செய்திகள் :

தஞ்சாவூர்: ஆயுதப்படை பெண் போலீஸ் தூக்கிட்டு மரணம்.. என்ன காரணம்?

post image

திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்தவர் காவேரி செல்வி (24). கடந்த 2023 ஆம் ஆண்டில் காவல் துறையில் பணிக்கு சேர்ந்த இவர் தஞ்சாவூரில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார். மணிமண்டபம் அருகே உள்ள ஆயுதப்படை காவலர்களுக்கான குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்தார்.

இந்தநிலையில், காவேரி செல்வி நேற்று வீட்டில் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்திருக்கிறார். இதைபார்த்த சக காவலர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் காவேரி செல்வி உடலை கைப்பற்றி, உடற் கூறாய்வுக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் போலீஸின் தற்கொலை குறித்த தகவல் எங்கும் பரவ போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து சிலரிடம் பேசினோம், காவேரி செல்வி ஒருவரை காதலித்து வந்த நிலையில் காதலனுடன் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் கடந்த ஒரு மாதமாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. சக காவலர்களுடன் கூட சரியாக பேசாமல் இருந்து வந்துள்ளார். போலீஸாக இருந்தாலும் காவேரி செல்வியும் ஒரு பெண் தான். அவர் இந்த விவகாரத்தை எதிர்கொள்ள முடியாது என நினைத்து விட்டதாக தெரிகிறது.

தற்கொலை தடுப்பு மையம்

இந்தநிலையில் காவேரி செல்வி தற்கொலை செய்து கொண்டார். காதல் விவகாரம் தான் காரணமா அல்லது வேறு எதாவது இருக்குமா என்பது குறித்து தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் தற்கொலை தீர்வில்லை என்பதை அவர் உணராமல் சென்று விட்டார். இது குறித்து தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

”இந்த சாதியில் பொறந்தது எங்க தப்பா?”- தாழ்த்தப்பட்டோர் ஆணைய விசாரணையில் கலங்கிய பெண்; பின்னணி என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி, அரசமரத் தெருவைச் சேர்ந்த அய்யாவு (55) பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்.இவரது மனைவி சாந்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு த... மேலும் பார்க்க

கோவை சிறுமி அளித்த `பகீர்' வாக்குமூலம் - சிக்கிய ஜான் ஜெபராஜ் உறவினர்!

கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள ஜெபக்கூடத்தில், ஜான் ஜெபராஜ் என்பவர் மத போதகராக இருந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். தன்னுடைய இசை நிகழ்ச்சி மூலம் அவர் கிறிஸ்தவ சமுதாயத்தில் பிரபலமானார். அ... மேலும் பார்க்க

Meerut Murder: பாம்புக் கடியில் இறந்தாரா கணவர்? மனைவி கைது; விசாரணையில் சிக்கியது எப்படி?

மீரட்டை சேர்ந்த அமித் (25) என்பவர் இரவில் உறங்கச் சென்றவர் காலையில் பாம்பு கடித்து இறந்து கிடந்தார். ஆரம்பத்தில் பாம்பு கடித்து இறந்ததாகவே போலீஸாரும் கருதினர்.மீரட் அருகில் உள்ள அக்பர்பூர் என்ற கிராமத... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.8 கோடி மதிப்பிலான போதைப்பொருள்; சிக்கிய பின்னணி என்ன?

நாகப்​பட்​டினம் மாவட்டம், விழுந்தமாவடியைச் சேர்ந்​தவர் அலெக்​ஸ் ​(வயது 32). இவர், போதைப்​பொருள் கடத்​தலில் ஈடு​படு​வ​தாக மத்​திய போதைப்​பொருள் தடுப்பு நுண்ணறி​வுப் பிரி​வினருக்குத் தகவல் கிடைத்​தது.இத... மேலும் பார்க்க

கரூர்: இரண்டு போக்சோ வழக்குகள் விசாரணை; ஒரே நாளில் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

கரூர் மாவட்டம், ராயனூர் அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் கடந்த 2020 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 14-ம் தேதி ஒரு சிறுமியை கடத்தி, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக, கரூர் அனைத்து மகளிர் காவல் ... மேலும் பார்க்க

சிவகாசி: பள்ளி சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர்? - போலீஸ் தீவிர விசாரணை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பள்ளி சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞரை நகர் காவல் நிலைய போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்... மேலும் பார்க்க