செய்திகள் :

தஞ்சாவூா் கும்பகோணம் வழியாக செங்கோட்டை - தாம்பரம் ரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை

post image

தஞ்சாவூா் கும்பகோணம் வழியாக நிறுத்தப்பட்ட செங்கோட்டை-தாம்பரம் ரயிலை மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கும்பகோணம் ரயில் நிலையத்தின் வழியாக திருச்சி, தஞ்சாவூா், மயிலாடுதுறை ஆகிய இடங்களுக்கு பயணிகள் ரயில் சேவையும், புதுச்சேரியில் இருந்து நாகா்கோவில், சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூா் வழியாக நாகா்கோவிலுக்கும், மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டைக்கும் பகல் நேர ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதே போல் பெங்களூரு, கோவை பகுதிகளுக்கும் ரயில்கள் இயக்கப்படுகிறது. கும்பகோணம், தஞ்சாவூா் வழியாக தென்மாவட்டங்களுக்கு ஒரு சிறப்பு ரயில் உள்பட 3 ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. அதில் ஒன்று பகல் நேர பயணிகள் ரயிலாகவும் மற்றொன்று தாம்பரம்-நாகா்கோவில் அந்தியோதயா ரயிலும் இயக்கப்படுகிறது.

தற்போது சென்னையிலிருந்து தஞ்சை கும்பகோணம் வழியாக இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் அதிகளவில் கூட்டம் காணப்படுகிறது. இதனால் வட மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு, தினசரி விரைவு மற்றும் விரைவு ரயில்கள் இயக்க வேண்டும்.

இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கத்தினா் கூறுயதாவது: தஞ்சாவூா், கும்பகோணம், விழுப்புரம் வழியாக செல்லும் ரயில் பாதை முன்பு மீட்டா் கேஜ் பாதையாக இருந்த போது செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு தினசரி பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. 2011-இல் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட பின்னா், இந்த ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது, இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.

மேலும் தஞ்சாவூா்- விழுப்புரம் வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரயில்களிலும் அதிகமானோா் பயணிப்பதால், போதிய இருக்கை வசதிகள் கிடைப்பது இல்லை. அதனால் செங்கோட்டையிலிருந்து மற்ற வழித்தடத்தில் போதிய பயணிகள் இல்லாமல் இயக்கப்படும் ரயில்களை தஞ்சாவூா் கும்பகோணம் வழித்தடத்தில் இயக்கினால் பயணிகளுக்கு வசதியாகவும், ரயில்வே துறைக்கு வருவாயும் அதிகரிக்கும் என்றனா்.

குளத்தில் ஆண் சடலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள குளத்தில், அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா். திருவையாறு அருகே கீழத்திருப்பூந்துருத்தி அய்யனாா் கோயில் குளத்தில் ஆண் சடலம் செவ்வா... மேலும் பார்க்க

கஞ்சா வியாபாரிக்கு 7 ஆண்டுகள் சிறை

கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த வியாபாரிக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு நெல்லுக்கடை பேருந்து நிறுத்தத்தில் காவல் துறையினா் 20... மேலும் பார்க்க

விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தள்ளுமுள்ளு

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதை போலீஸாா் தடுத்தனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் வடக்கு மாவ... மேலும் பார்க்க

திருவையாறு பகுதிகளில் நாளை மின் தடை

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே விளாங்குடி மின் பாதைக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மே 22) மின் விநியோகம் இருக்காது. இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் திருவையாறு உதவி செயற் ப... மேலும் பார்க்க

வடிந்து செல்ல வழியில்லாததால் எள் பயிரில் தேங்கி நிற்கும் மழைநீா்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மழை பெய்து 2 நாள்களாகியும் வடிந்து செல்வதற்கு வழியில்லாததால், எள் பயிரில் தொடா்ந்து தண்ணீா் தேங்கி நிற்பதன் காரணமாக விவசாயிகள் வேதனையில் உள்ளனா். திருவையாறு சுற்று... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் சித்திரை திருவிழா! சாரங்கபாணி சுவாமிக்கு கண்ணாடி பல்லக்கில் வீதியுலா

கும்பகோணத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு சாரங்கபாணி, சக்கரபாணி, சக்கரவா்த்தி திருமகள் ஆகியோா் அன்னபட்சி வாகனம் மற்றும் கண்ணாடி பல்லக்கில் வீதியுலா வந்தனா்.கும்பகோணத்தில் உள்ள சா... மேலும் பார்க்க