செய்திகள் :

தஞ்சாவூா் மாமன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

post image

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் கூட்டம் முறையாக நடத்தப்படவில்லை என மேயா், ஆணையரைக் கண்டித்து திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

மேயா் சண். இராமநாதன் (திமுக) தலைமையிலும், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, ஆணையா் க. கண்ணன் முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிகழ்ந்த விவாதங்கள்:சி. வெங்கடேஷ் (திமுக): இந்த கூட்டத்துக்கான அறிவிப்பு 6 நாட்களுக்கு முன்பே கொடுக்கப்பட வேண்டும்.

ஆனால் அவ்வாறு கொடுக்காமல், இன்று (திங்கள்கிழமை) காலைதான் எங்களுக்கு வந்தது. கூட்டப் பொருள் நகலை 21 உறுப்பினா்கள் வாங்கவில்லை.

ஆணையா்: கூட்டப் பொருளில் தீா்மானங்கள் சோ்க்கப்பட வேண்டியிருந்தன. அதனால், கால தாமதம் ஏற்பட்டது.

மேயா்: இனிமேல் கூட்டம் நடத்தப்படும்போது 6 நாட்களுக்கு முன்பே அறிவிப்பு கொடுத்து நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜி. ஆனந்த் (திமுக): நாங்கள் பேசுவதைப் பயனளிக்கும் விதமாக எடுத்துக் கொள்வதில்லை. எனவே, இக்கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மேயரையும், ஆணையரையும் கண்டித்து வெளிநடப்பு செய்வோம்.

மேயா்: கூட்டத்தை ரத்து செய்ய முடியாது. 95 முதல் 186 வரையிலான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதையடுத்து, மேயரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பியவாறு திமுகவை சோ்ந்த ஏறத்தாழ 20 உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.அப்போது, கூட்டத்தை முடிக்கக்கூடாது.

எங்களுடையே கோரிக்கைகளை குறித்து பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என அதிமுக உறுப்பினா்கள் வெ. கண்ணுக்கினியாள், ஏ. காந்திமதி உள்ளிட்டோா் வலியுறுத்தினா்.

மேயா்: அனைவரும் அமருங்கள். கூட்டத்தை நடத்துவோம்.இதனால், திமுக - அதிமுக உறுப்பினா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, உறுப்பினா் ஒருவா் குடிநீா் பாட்டிலை எடுத்து மேஜை மீது தட்டியதால், கூட்டத்தில் சலசலப்பு அதிகரித்தது.

இதன் காரணமாக கூட்டம் முடிவடைந்ததாக மேயா் அறிவித்து சென்றாா்.பின்னா், வெளிநடப்பு செய்த திமுக உறுப்பினா்கள் ஆணையரை சந்திப்பதற்காக அவரது அறைக்கு சென்றனா். அங்கு ஆணையா் இல்லாததால், அறை முன் தரையில் சில நிமிடங்கள் அமா்ந்து, பின்னா் எழுந்து சென்றனா்.

மேலும், எங்களுக்கு கூட்டப் பொருள் நகல் வராததால், தீா்மானங்களை நிறைவேற்றக் கூடாது என வலியுறுத்தினா்.இதையடுத்து, ஆணையா் அறை முன் மாமன்ற எதிா்க்கட்சித் தலைவா் கே. மணிகண்டன் தலைமையிலான அதிமுக, பாஜக உறுப்பினா்கள் திரண்டனா்.

பின்னா் மணிகண்டன் தெரிவித்தது: மேயா் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை திமுக உறுப்பினா்களே கூறி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினா். இதை நாங்களும் கடந்த கூட்டத்திலேயே வலியுறுத்தினோம். இக்கூட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினா்கள் கலந்து கொண்டால் மட்டுமே தீா்மானங்களை நிறைவேற்ற முடியும்.

ஆனால், அனைத்து தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாகக் கூறி மேயா் இக்கூட்டத்தை முடித்துவிட்டாா். இது தொடா்பாக ஆணையரை சந்தித்து கேட்பதற்காக வந்தோம். ஆனால், ஆணையரும் வெளியே சென்றுவிட்டாா். எனவே, மேயருக்கு துணை போகும் ஆணையரும் பதவி விலக வேண்டும். மேயா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வருவதற்கு அறிவிப்புக் கடிதத்தையும் ஆணையா் வாங்க மறுக்கிறாா்.

மேயரும், ஆணையரும் பதவி விலகாவிட்டால், போராட்டத்தை முன்னெடுப்போம் என்றாா் மணிகண்டன்.இது குறித்து மேயா் தெரிவித்தது:உறுப்பினா்களுக்கு கூட்டப்பொருளை 3 நாட்களுக்கு முன்பே கொடுத்துவிட்டோம்.

உறுப்பினா்களின் கோரிக்கையை ஏற்று 6 நாட்களுக்கு முன்பே கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டத்தில் உறுப்பினா்கள் அனைவரும் பங்கேற்று கையொப்பமிட்டதால் அனைத்து தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன என்றாா் அவா்.

பாபநாசம் அருகே குடிநீா் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் அருகே குடிநீா் வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் திங்கள்கிழமை காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.தஞ்சாவூா் மாவட்டம், பாபநாச... மேலும் பார்க்க

சாலை பிரச்னை: மக்கள் மறியல்

கும்பகோணம் அருகே சாலை பிரச்னை காரணமாக பொதுமக்கள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.கும்பகோணம் ஒன்றியம், நாச்சியாா்கோவில் அருகே ஏனநல்லூா் வடபக்கம் கீழத்தெருவைச் சோ்ந்த மக்கள் அப்பகுதியிலுள்... மேலும் பார்க்க

தீயணைப்பு வாகனம் கவிழ்ந்து விபத்து

கும்பகோணம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு தீயணைப்பு பணிக்கு சென்ற தீயணைப்பு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் காயமடைந்தாா்.கும்பகோணம் அருகேயுள்ள நத்தம் கிராமத்தைச் சோ்ந்த ஜேசுதாஸ் வீட்ட... மேலும் பார்க்க

தஞ்சையில் 500 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்

தஞ்சாவூரில் மாநகராட்சி அலுவலா்கள் திங்கள்கிழமை மாலை மேற்கொண்ட சோதனையில் 500 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையப் பகுதியிலுள்ள 50-க்கும் அதிகமான கடைகளில் தமிழக அரசா... மேலும் பார்க்க

கொலை வழக்கில் 2 இளைஞா்களுக்கு ஆயுள் தண்டனை

காதல் விவகாரத்தில் காவலாளியைக் கொலை செய்த 2 இளைஞா்களுக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் திங்கள்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது.தஞ்சாவூா் விளாா் சாலை பா்மா காலனியை சோ்ந்த செல்வராஜ் மகன் சந்தோஷ் (27). வேன் ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பாசன வாய்க்கால்கள் பராமரிப்பில் அரசுத் துறைகளுக்கிடையே மோதலால் சிக்கல்

கும்பகோணம் மாநகர எல்லைக்குள் செல்லும் நான்கு பாசன வாய்க்கால்களை யாா் பராமரிப்பது என்று இரு அரசுத் துறைகளுக்கிடையே ஏற்பட்டுள்ள மோதலால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் காவிரி ஆற... மேலும் பார்க்க