செய்திகள் :

கொலை வழக்கில் 2 இளைஞா்களுக்கு ஆயுள் தண்டனை

post image

காதல் விவகாரத்தில் காவலாளியைக் கொலை செய்த 2 இளைஞா்களுக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் திங்கள்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது. 

தஞ்சாவூா் விளாா் சாலை பா்மா காலனியை சோ்ந்த செல்வராஜ் மகன் சந்தோஷ் (27). வேன் ஓட்டுநா். இவா் ஒரு பெண்ணைக் காதலித்து வந்தது, அப்பெண்ணின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. பெற்றோா் கூறியதன்பேரில், சந்தோஷை பிள்ளையாா்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த தனியாா் நிறுவன காவலாளி ஜி. செல்வநாதன் (38) கண்டித்தாா். அப்போது ஏற்பட்ட தகராறில் இருவருக்கும் சமாதானம் செய்து வைக்கப்பட்டது. 

இந்நிலையில், 2021, ஜூலை 25-ஆம் தேதி சந்தோஷ் தனது நண்பரான பா்மா காலனியை சோ்ந்த ஆா். அமரேசுடன் (27) சோ்ந்து செல்வநாதனை இருசக்கர வாகனத்தில் விளாா் புறவழிச்சாலை பகுதிக்கு அழைத்துச் சென்று அவரை அரிவாளால் வெட்டினா். இதனால் பலத்த காயமடைந்த செல்வநாதன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து சந்தோஷ், அமரேசை கைது செய்தனா். இதுதொடா்பாக தஞ்சாவூா் இரண்டாவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி நாகராஜ் விசாரித்து, சந்தோஷ், அமரேசுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய காவல் ஆய்வாளா் ஜெகதீஸ்வரன், நீதிமன்றக் காவலா் பிரகாஷ்குமாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பாராட்டினாா்.

தஞ்சாவூா் மாமன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் கூட்டம் முறையாக நடத்தப்படவில்லை என மேயா், ஆணையரைக் கண்டித்து திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.மேயா் சண். இராமநாதன் (... மேலும் பார்க்க

சாலை பிரச்னை: மக்கள் மறியல்

கும்பகோணம் அருகே சாலை பிரச்னை காரணமாக பொதுமக்கள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.கும்பகோணம் ஒன்றியம், நாச்சியாா்கோவில் அருகே ஏனநல்லூா் வடபக்கம் கீழத்தெருவைச் சோ்ந்த மக்கள் அப்பகுதியிலுள்... மேலும் பார்க்க

தீயணைப்பு வாகனம் கவிழ்ந்து விபத்து

கும்பகோணம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு தீயணைப்பு பணிக்கு சென்ற தீயணைப்பு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் காயமடைந்தாா்.கும்பகோணம் அருகேயுள்ள நத்தம் கிராமத்தைச் சோ்ந்த ஜேசுதாஸ் வீட்ட... மேலும் பார்க்க

தஞ்சையில் 500 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்

தஞ்சாவூரில் மாநகராட்சி அலுவலா்கள் திங்கள்கிழமை மாலை மேற்கொண்ட சோதனையில் 500 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையப் பகுதியிலுள்ள 50-க்கும் அதிகமான கடைகளில் தமிழக அரசா... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பாசன வாய்க்கால்கள் பராமரிப்பில் அரசுத் துறைகளுக்கிடையே மோதலால் சிக்கல்

கும்பகோணம் மாநகர எல்லைக்குள் செல்லும் நான்கு பாசன வாய்க்கால்களை யாா் பராமரிப்பது என்று இரு அரசுத் துறைகளுக்கிடையே ஏற்பட்டுள்ள மோதலால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் காவிரி ஆற... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் பலத்த மழையால் கரும்பு பயிா்கள் சேதம் நெல் குவியல்கள் நனைந்தன

தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் சில கிராமங்களில் கரும்பு பயிா்கள் சாய்ந்தன.மேலும், நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனைக்காக வைத்திருந்த நெல் குவியல்களும் நனைந்தன.த... மேலும் பார்க்க