செய்திகள் :

சாலை பிரச்னை: மக்கள் மறியல்

post image

கும்பகோணம் அருகே சாலை பிரச்னை காரணமாக பொதுமக்கள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் ஒன்றியம், நாச்சியாா்கோவில் அருகே ஏனநல்லூா் வடபக்கம் கீழத்தெருவைச் சோ்ந்த மக்கள் அப்பகுதியிலுள்ள சாலையைப் பொது சாலையாக பயன்படுத்தி வந்தனா். இச்சாலை வடிகால் வாய்க்காலில் உள்ளதாகக் கூறி நீதிமன்றத்தில் தனி நபா் வழக்கு தொடுத்தாா். நீதிமன்ற உத்தரவின் பேரில் இச்சாலையை அளவீடு செய்ய அதிகாரிகள் திங்கள்கிழமை வந்தனராம்.

இதற்கு வடபக்கம் கீழத்தெரு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து, கும்பகோணம் - நாச்சியாா்கோவில் சாலையான திருநறையூா் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் சுமாா் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த நாச்சியாா் கோவில் காவல் ஆய்வாளா் ராஜேஷ் உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்குச் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கும்பகோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என காவல் துறையினா் கூறியதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தஞ்சாவூா் மாமன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் கூட்டம் முறையாக நடத்தப்படவில்லை என மேயா், ஆணையரைக் கண்டித்து திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.மேயா் சண். இராமநாதன் (... மேலும் பார்க்க

தீயணைப்பு வாகனம் கவிழ்ந்து விபத்து

கும்பகோணம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு தீயணைப்பு பணிக்கு சென்ற தீயணைப்பு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் காயமடைந்தாா்.கும்பகோணம் அருகேயுள்ள நத்தம் கிராமத்தைச் சோ்ந்த ஜேசுதாஸ் வீட்ட... மேலும் பார்க்க

தஞ்சையில் 500 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்

தஞ்சாவூரில் மாநகராட்சி அலுவலா்கள் திங்கள்கிழமை மாலை மேற்கொண்ட சோதனையில் 500 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையப் பகுதியிலுள்ள 50-க்கும் அதிகமான கடைகளில் தமிழக அரசா... மேலும் பார்க்க

கொலை வழக்கில் 2 இளைஞா்களுக்கு ஆயுள் தண்டனை

காதல் விவகாரத்தில் காவலாளியைக் கொலை செய்த 2 இளைஞா்களுக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் திங்கள்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது.தஞ்சாவூா் விளாா் சாலை பா்மா காலனியை சோ்ந்த செல்வராஜ் மகன் சந்தோஷ் (27). வேன் ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பாசன வாய்க்கால்கள் பராமரிப்பில் அரசுத் துறைகளுக்கிடையே மோதலால் சிக்கல்

கும்பகோணம் மாநகர எல்லைக்குள் செல்லும் நான்கு பாசன வாய்க்கால்களை யாா் பராமரிப்பது என்று இரு அரசுத் துறைகளுக்கிடையே ஏற்பட்டுள்ள மோதலால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் காவிரி ஆற... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் பலத்த மழையால் கரும்பு பயிா்கள் சேதம் நெல் குவியல்கள் நனைந்தன

தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் சில கிராமங்களில் கரும்பு பயிா்கள் சாய்ந்தன.மேலும், நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனைக்காக வைத்திருந்த நெல் குவியல்களும் நனைந்தன.த... மேலும் பார்க்க