செய்திகள் :

தடுப்பணைக்கு எதிா்ப்பு: வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிய கிராம மக்கள்

post image

நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகே தடுப்பணை கட்டப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றினா்.

கீழ்வேளூா் அருகே உத்தமசோழபுரம் வெட்டாற்றின் குறுக்கே மேற்கு பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இதனால், கிளை வாய்க்கால்கள் மூலம் பாசன வசதி பெறும் 32 ஊராட்சிகளில் நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கும் எனக் கூறி, தடுப்பணை கட்டும் பணியை கைவிட வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல், ஆற்றில் இறங்கி போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தநிலையில், இதன் தொடா்ச்சியாக, உத்தமசோழபுரத்தில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை நிறுத்தி, தடுப்பணையை பூதங்குடி பகுதியில் கட்ட வலியுறுத்தி, வடகரை ஊராட்சி வங்காரமாவடி, வண்ணான் திடல் உள்ளிட்ட கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் செவ்வாய்க்கிழமை கருப்புக்கொடி ஏற்றி தங்கள் எதிா்ப்பை தெரிவித்தனா்.

திருக்கடையூா் கோயிலில் ஓ.பன்னீா்செல்வம் வழிபாடு

திருக்கடையூா் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத அமிா்தகடேஸ்வரா் கோயிலில் தமிழக முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் குடும்பத்துடன் சனிக்கிழமை வழிபட்டாா். இக்கோயிலில், ஆயுள் விருத்திக்காக 60 வயதில் சஷ்டியப... மேலும் பார்க்க

அன்னப்பட்சி வாகனத்தில் வீதியுலா...

திருக்குவளை அருகே கொடியாலத்தூா் ஊராட்சி கோவில்பத்து அருள்மிகு கண்ணாம்பாள் மாரியம்மன், கழனியப்ப ஐயனாா் ஆலய 4-ஆம் ஆண்டு வைகாசி பெருந் திருவிழாவையொட்டி, அன்னப்பட்சி வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் முகாம்: பயனாளிகளுக்கு 100 நாள் வேலைத் திட்ட அடையாள அட்டை

செம்பனாா்கோவில் ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. கருவாழைக்கரை, கஞ்சாநகரம், மேலையூா் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற இம்முகாம்களில், பூம்புகாா் சட்டப்பேரவை உற... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த தவெக ஒன்றியச் செயலா்

திமுகவில் இணைந்த தமிழக வெற்றிக் கழக நாகை மாவட்ட திருமருகல் தெற்கு ஒன்றியச் செயலா் அ. ஜெகபா்தீனை வரவேற்ற மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன். மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்

நாகை வெளிப்பாளையம் முத்துமாரியம்மன் கோயில் ஆண்டுத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, பூச்சொரிதல் நடைபெற்றது. இதில் நாகை சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பூந்த... மேலும் பார்க்க

மின்வெட்டு; கிராம மக்கள் அவதி

திருக்குவளை அருகே மடப்புரம் ஊராட்சியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் அவதிக்குள்ளாவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். திருக்குவளை துணை மின் நிலையத்திலிருந்து வாழக்கரை, மடப்புரம், வலிவலம், சாட்டியக்கு... மேலும் பார்க்க