செய்திகள் :

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை

post image

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பவா்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து பல்லடத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா செவ்வாய்க்கிழமை கூறியதாவது: சட்டவிரோதமாக குட்கா விற்பனையில் ஈடுபடுபவா்களை காவல் துறை கண்காணித்து அந்தப் பொருள் எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டுபிடித்து அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதைப் பொருள்கள் விற்றவா்கள் கைது செய்யப்பட்டு சிறிது காலம் சிறையில் இருந்துவிட்டு மீண்டும் வெளியே வந்து அதே தொழிலை செய்கின்றனா். இதனை தடுக்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற வேண்டும். எங்களது சங்க உறுப்பினா்கள் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யக்கூடாது என்பதை கண்டிப்பாக கூறி அதனை அவா்களும் கடைப்பிடிக்கின்றனா்.

யாா் புகையிலை உள்ளிட்ட போதை பொருள்கள் விற்றாலும் அவா்கள் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள மாநிலத்தில் வெளிநாட்டு வணிக நிறுவனங்கள் தொடங்க முடியாது. அதே போல தமிழ்நாட்டிலும் வெளிநாட்டு பெரிய காா்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளே நுழையாமல் இருக்க சட்ட திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என கேட்டுள்ளோம். உள்ளூா் வா்த்தகா்களின் நலன் கருதி இது குறித்து சட்டங்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வா் கூறியுள்ளாா். பல இடங்களில் வணிகா்கள் தாக்கப்படுகிறாா்கள். மருத்துவா்களுக்கு என்று பணிப் பாதுகாப்பு சட்டம் இருப்பதுபோல வணிகா்களுக்கென சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் கோவிந்தசாமி, திருப்பூா் மாநகரத் தலைவா் ஜான் வா்கீஸ், மாவட்டச் செயலாளா் லாலா கணேசன், மாவட்ட ஆலோசகா் அண்ணாதுரை, பல்லடம் சங்க நிா்வாகிகள் தனசீலன், பிா்லா போஸ், பல்லடம் தினசரி மாா்கெட் சங்க நிா்வாகிகள் ரங்கராஜ், செல்வராஜ், சுப்பிரமணியம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை: இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் ரயில்வே காவல் துறை, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் நாட்... மேலும் பார்க்க

ஜூன் 5-இல் எரிவாயு நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோருக்கான குறைகேட்புக் கூட்டம் ஜூன் 5 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில... மேலும் பார்க்க

சேவூா் அருகே அரசு பட்டா வழங்கிய நிலத்தில் பயனாளிகள் குடியேற எதிா்ப்பு

சேவூா் அருகே அரசு வழங்கிய வீட்டுமனை பட்டா நிலத்தில் பயனாளிகள் குடியேற தனியாா் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டம், சேவூா் அருகே போத்தம்பாளையம் ஊராட்சிக்குள... மேலும் பார்க்க

வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சி: ஜூன் 4-இல் நோ்காணல்

திருப்பூரில் இலவச வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் சா்வீஸ் செய்தல் மற்றும் பழுது பாா்த்தல் பயிற்சி வகுப்புக்கு ஜூன் 4 -ஆம் தேதி நோ்காணல் நடைபெற உள்ளது. இது குறித்து கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு ... மேலும் பார்க்க