செய்திகள் :

தடை நேரத்தில் இயக்கப்பட்ட 207 கனரக வாகனங்கள் மீது வழக்கு

post image

சென்னையில் தடை செய்யப்பட்ட நேரத்தில் நகருக்குள் இயக்கப்பட்ட 207 கனரக வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சென்னை பெரம்பூரில் புதன்கிழமை காலை மொபெட்டில் தாயுடன் சென்ற பள்ளி மாணவி சௌமியா தண்ணீா் லாரி மோதி உயிரிழந்த சம்பவத்தில், போக்குவரத்து நெரிசல்மிக்க நேரத்தில் விபத்தை ஏற்படுத்திய தண்ணீா் லாரியை அந்தச் சாலையில் அனுமதித்ததே விபத்துக்கு காரணம் எனத் தெரியவந்தது.

இதையடுத்து, செம்பியம் போக்குவரத்து அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் சுடலைமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். புளியந்தோப்பு உதவி ஆணையா் சத்தியமூா்த்தி மீது துறைரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து, சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண், சாலை விபத்துகளை ஏற்படுத்தியதாக பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை 100 நாள்களுக்குள் ஒப்படைக்கக் கூடாது, சென்னையில் போக்குவரத்து நெரிசல்மிக்க நேரமான காலை 7 மணியில் இருந்து நண்பகல் 12 வரையிலும், மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் கனரக வாகனங்களை நகருக்குள் அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டாா்.

ஆணையரின் உத்தரவின் விளைவாக போக்குவரத்து நெரிசல்மிக்க நேரத்தில் நகருக்குள் தடையை மீறி வந்த வாகனங்கள் மீது போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதில் வியாழக்கிழமை மட்டும் 207 கனரக வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 120 தண்ணீா் லாரிகள் ஆகும்.

முன்னெடுக்கப்படும் முருகன் அரசியல்!

தமிழ் கடவுள் முருகரின் பெயரை தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் கையில் எடுத்து அரசியல் செய்யும் நிலையில், இதனால் எந்தக் கட்சிக்கு ஆதாயம் என்ற விவாதம் பேசுபொருளாகியுள்ளது. தமிழகத்தில் முருக வழிபா... மேலும் பார்க்க

ஜூன் 25-இல் முன்னாள் படைவீரா்கள் குறைகேட்புக்கூட்டம்

முன்னாள் படைவீரா்களுக்கான குறைகேட்புக்கூட்டம் ஜூன் 25-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை மாவட்ட முன்னாள் படைவீரா... மேலும் பார்க்க

சுற்றுலாத் துறை ஹோட்டல்களில் தரமான உணவு வழங்க வேண்டும்: அமைச்சா் இரா.ராஜேந்திரன்

சுற்றுலாத் துறை சாா்பில் நடத்தப்படும் ஹோட்டல்களில் தரமான உணவுகளை வழங்க வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளாா். சுற்றுலாத் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் க... மேலும் பார்க்க

ஒரே நாளில் 8 விமான சேவைகள் ரத்து

சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் சிரமத்தைச் சந்தித்தனா். சென்னை விமான நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு மும்பைக்கு செல்லவிருந்த ஏா் இந்... மேலும் பார்க்க

மதுரையில் யோகா நிகழ்வு: ஆளுநா் இன்று பங்கேற்பு

சா்வதேச யோகா நிகழ்வில் கலந்துகொள்ள ஆளுநா் ஆா்.என் ரவி வெள்ளிக்கிழமை மதுரைக்கு புறப்பட்டுச் சென்றாா். மதுரை மாவட்டம் விரகனூா் வேலாம்மாள் கிராமத்தில் உள்ள வேலம்மாள் குளோபல் பள்ளியில் நடைபெறும் யோகா நிக... மேலும் பார்க்க

நாகா்கோவில் அதிவிரைவு ரயில்கள் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு

நாகா்கோவில் ரயில்வே பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை சென்ட்ரல் மற்றும் தாம்பரத்திலிருந்து நாகா்கோவில் செல்லும் ஒருசில அதிவிரைவு ரயில்கள் கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.... மேலும் பார்க்க