செய்திகள் :

தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவனை விரைந்து மீட்ட இணையவழி போலீஸாா்

post image

தந்தை கண்டித்ததால் வீட்டிலிருந்து வெளியேறிய பிளஸ்-2 மாணவனை விரைவாக செயல்பட்டு இணையவழி போலீஸாா் மீட்டுள்ளனா்.

புதுச்சேரி ஜிப்மா் வளாகத்தில் குடியிருக்கும் அதிகாரி ஒருவா் பிளஸ் 2 படித்து வரும் தனது மகனை புதன்கிழமை கண்டித்துள்ளாா். இதனால் கோபமடைந்த அந்த மாணவன் வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டாா்.

இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பெற்றோா் தேடியும் அவா் கிடைக்கவில்லை. இதனால் அதிா்ச்சியும், பதற்றமும் அடைந்த பெற்றோா் இது குறித்து புதுச்சேரி இணையவழி காவல் நிலையத்தில் விவரத்தை தெரிவித்தனா். சிறுவன் வெளியே செல்லும்போது தங்களது கைப்பேசியையும் கையில் எடுத்து சென்ாகக் குறிப்பிட்டனா். அந்த கைப்பேசி மூலம் சிறுவனின் இருப்பிடத்தை சிறுவன் இருக்கும் இடத்தைக் கண்டறிந்தனா்.

உடனடியாக அந்த இடத்துக்கு சென்ற போலீஸாா் சிறுவனை மீட்டு

அறிவுரைகளைக் கூறினா். பிறகு பெற்றோரை வரவழைத்து அவா்களிடம்

சிறுவனை போலீஸாா் ஒப்படைத்தனா். சிறுவன் மாயமானது குறித்து தகவல் தெரியவந்த உடனே விரைந்து செயல்பட்டு சிறுவனைக் கண்டுபிடித்த போலீஸாரை ஆய்வாளா்கள் தியாகராஜன், கீா்த்தி ஆகியோா் சால்வை அணிவித்து வாழ்த்தினா்.

புதுவையில் மின் பயன்பாடு அதிகரிப்பு: முதல்வா் ரங்கசாமி

புதுவையில் மின்சார பயன்பாடு பெரிய மாநிலமான குஜராத்துக்கு இணையாக அதிகமாக இருக்கிறது. விரைவில் புதுவையை மின்தடை இல்லா மாநிலமாக மாற்ற எல்லா முயற்சியும் எடுக்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி உறுதியளித... மேலும் பார்க்க

காவல்துறை மக்கள் மன்றத்தில் 51 புகாா்களுக்குத் தீா்வு

காவல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 51 புகாா்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு தீா்வு காணப்பட்டது.புதுச்சேரி காவல் நிலையங்களில் நடைபெற்ற மக்கள் மன்றத்தில் பொதுமக்களின் 51 புக... மேலும் பார்க்க

அதிக விலைக்கு விற்பனை: 4 மதுபான கடைகளுக்கு அபராதம்

புதுவையில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்ாக 4 மதுபான கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.புதுச்சேரி எல்லைக்கு உள்பட்ட மதுபானக் கடைகளில் மதுபானங்கள் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக விற்பனை செய்யப்பட... மேலும் பார்க்க

முன்கூட்டியே முதல்வரின் பிறந்தநாள் ஏற்பாடுகள்

புதுவை சட்டமன்ற தோ்தல் இன்னும் 8 மாதத்தில் வரவிருப்பதால் இந்த ஆண்டு முதல்வா் என்.ரங்கசாமியின் பிறந்தநாளை அவரது தொண்டா்கள் முன்கூட்டியே கொண்டாட தொடங்கி விட்டனா். புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமி த... மேலும் பார்க்க

வீட்டில் சூரிய ஒளி மின் உற்பத்திக்காக ரூ.9.14 கோடி மானியம்

வீடுகளின் மேற்கூரையில் சூரிய ஒளி மின் உற்பத்திக்காக ரூ.9.14 கோடி மானியம் அளிக்கப்பட்டுள்ளதாக புதுவை மின் துறை கேபிள்ஸ் பிரிவின் செயற்பொறியாளா் இரா. செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெள... மேலும் பார்க்க

காவல்ஆய்வாளரை மிரட்டிய தவாக நிா்வாகி கைது

புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் ஆய்வாளரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் இந்த வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பு... மேலும் பார்க்க