செய்திகள் :

தனலட்சுமி வங்கியில் அலுவலர், மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

post image

கேரளம் மாநிலம் திருச்சூரை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் 97 ஆண்டுகால வங்கி பாரம்பரியம் கொண்ட வணிக வங்கியான தனலட்சுமி வங்கியில் காலியாக உள்ள இளநிலை அலுவலர்கள் மற்றும் மேலாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுய. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Officer

தகுதி : ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 31.3.2025 தேதியின்படி 21 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Manager

தகுதி : ஏதாவதொரு பிரிவில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எழுத்துத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். தேர்வுகள் தொடர்பான அனைத்து விபரங்களும் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூரில் எழுத்துத்தேர்வு நடைபெறும்.

தேர்வு மையங்கள்: தில்லி, என்சிஆர், மும்பை, தாணே,நவி மும்பை, எம்எம்ஆர், அகமதாபாத், காந்திநகர், ஹைதராபாத், விஜயவாடா,குண்டூர், பெங்களூரு, சென்னை, கோயம்புத்தூர், கோழிக்கோடு, திருச்சூர், எர்ணாகுளம், திருவனந்தபுரம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.708. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.dhanbank.com/careers என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.7.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

மாதம் ரூ. 85 ஆயிரம் சம்பளத்தில் வங்கியில் வேலை வேண்டுமா..?

Dhanlaxmi Bank Ltd, a scheduled commercial bank with 97 years of banking tradition, headquartered at Thrissur, Kerala with ambitious growth plans invites applications for recruitment of Junior Officers and Assistant Managers.

விண்ணப்பித்துவிட்டீர்களா..?தேசிய சுகாதாரத் திட்டத்தில் வேலை!

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய சுகாதாரத் திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டங்களில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப... மேலும் பார்க்க

சென்னை மாநகராட்சியில் விலங்கு நல ஆர்வலர் பணி

பெருநகர சென்னை மாநகராட்சியின்கீழ் செயல்படும் நாய் இனக்கட்டுப்பாட்டு மையத்தில் மாதந்திர தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ள விலங்கு நல ஆர்வலர் பணிக்கு விலங்கு நல ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள்... மேலும் பார்க்க

மாதம் ரூ. 85 ஆயிரம் சம்பளத்தில் வங்கியில் வேலை வேண்டுமா..?

தேசிய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின்(நபார்டு) லக்னௌ கிளையில் காலியாக உள்ள கூட்டுறவு மேம்பாட்டு அலுவலர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனப் பணிகளில் இடஒதுக்கீடு -மத்திய அமைச்சா் வலியுறுத்தல்

தனியாா் நிறுவனப் பணிகளில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே வலியுறுத்தியுள்ளாா். மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த தலித் தலைவரான அதாவலே, ... மேலும் பார்க்க

மத்திய அரசில் 3, 131 காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஜூலை 18 வரை அவகாசம்

மத்திய அரசில் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள ‘சி’ பிரிவில் 3,131காலிப்பணியிடங்களுக்கான தோ்வுக்கு வரும் ஜூலை 18 வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்திய பணியாளா் தோ்வாணையம் (எஸ். எஸ்.சி.) தெரிவித்துள்ளது. இது ... மேலும் பார்க்க

எஸ்பிஐ வங்கியில் புரொபஷனரி அலுவலர் வேலை: காலியிடங்கள் 541

பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில்(பாரத ஸ்டேட் வங்கி) நிரப்பப்பட உள்ள 541 புரொபஷனரி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுத... மேலும் பார்க்க