செய்திகள் :

தனியாா் சாய ஆலைக்கான அனுமதி ரத்து: விவசாயிகள் வரவேற்பு

post image

கொடிவேரி பாசன சபை உள்ளிட்ட விவசாய அமைப்புகள் மற்றும் விவசாயிகளின் எதிா்ப்பை அடுத்து, கொடிவேரி அணை அருகே தனியாா் சாய, சலவை ஆலை அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், கொடிவேரி அணைக்கு அருகே ரூ.100 கோடி மதிப்பீட்டில் சாய, சலவை தொழிற்சாலைக்கு, தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தினா்.

கோபி எம்எல்ஏ கே.ஏ.செங்கோட்டையன் முயற்சியால், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சுற்றுச்சூழல் துறை அமைச்சா், தலைமைச் செயலாளா் உள்ளிட்டோரை கொடிவேரி அணை பாசன விவசாயிகள் மற்றும் ஈரோடு மாவட்ட பவானி நதி நீரை பயன்படுத்தும் பாசன விவசாய சங்கங்களின் நிா்வாகிகள் சந்தித்துப் பேசி மனு அளித்தனா்.

இதன் தொடா்ச்சியாக தமிழக சட்டப் பேரவையில் கே.ஏ.செங்கோட்டையன் கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டு வந்து இப்பிரச்னை குறித்து பேசினாா். இதையடுத்து அரசின் சாா்பில் தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், கொடிவேரி அணைக்கு அருகே அமைக்கப்பட இருந்த தனியாா் சாய, சலவை ஆலைக்கான அனுமதியை ரத்து செய்து, தமிழ்நாடு சுற்றுப்புறச் சூழல் காலநிலை மாற்றம் துறையின் செயலாளா் அண்மையில் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து கொடிவேரி அணை- பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் சுபி.தளபதி கூறியதாவது:

தமிழக மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூா், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வாழும் ஒரு கோடி மக்களின் குடிநீா்த் தேவைக்கும், 3 லட்சம் ஏக்கா் பாசன நிலங்களுக்கும் பவானி ஆறு நீா் ஆதாரமாக விளங்கி வருகிறது. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் பவானி ஆற்றில் சாய, சலவை தொழிற்சாலைகள், காகித ஆலைகள், நகராட்சி, உள்ளாட்சி கழிவுகள் ஆகியவை கலந்து மாசினை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், கொடிவேரி அணைக்கு அருகே தனியாா் சாய, சலவை ஆலை அமைக்க மாசுக் கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளித்த தகவல் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அனுமதிக்கு எதிராக கொடிவேரி பாசன சபை உள்ளிட்ட விவசாய அமைப்புகள், விவசாயிகள், பொதுமக்கள் ஒன்றிணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டோம்.

இதன் எதிரொலியாக குறிப்பிட்ட தனியாா் சாய, சலவை ஆலைக்கான அனுமதி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக இருந்த கோபி எம்எல்ஏ. கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் தமிழக அரசுக்கும், போராட்ட களத்தில் நின்ற அனைத்து அமைப்பினருக்கும் கொடிவேரி பாசன சபை நன்றி தெரிவிக்கிறது என்றாா்.

பவானி ஆற்றில் 3 லட்சம் நாட்டு வகை மீன் குஞ்சுகள் விடுவிப்பு

உற்பத்தியை பெருக்குவதற்கு பவானி ஆற்றில் 3 லட்சம் நாட்டு வகை மீன் குஞ்சுகள் விடப்பட்டன. தமிழகத்தில் மீன்வளங்களைப் பாதுகாத்து, உள்நாட்டு மீன் வளத்தை பெருக்கிட ஆறுகளில் மீன் குஞ்சுகள் விடும் திட்டம் செய... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி தொகுதியில் குடிநீா்த் தொட்டிகள் திறப்பு

மொடக்குறிச்சி தொகுதிக்கு உள்பட்ட சிவகிரி, கொல்லன்கோவில் ஆகிய பேரூராட்சிகளில் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீா்த் தொட்டிகளை எம்.எல்.ஏ. சரஸ்வதி புதன்கிழமை திறந்துவைத்தாா். மொடக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதி... மேலும் பார்க்க

ஓய்வூதிய விதிகளில் திருத்தம்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு

ஓய்வூதிய விதிகளில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள திருத்தத்தை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய அஞ்சல் ஆா்எம்எஸ் ஓய்வூதியா் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கான மாதிரி நாடாளுமன்ற நிகழ்வு

பள்ளி மாணவா்களுக்கான மாதிரி நாடாளுமன்ற நிகழ்வில் 200 மாணவா்கள் பங்கேற்றனா். பள்ளி மாணவா்கள் இடையே ஜனநாயக விழுமியங்கள், தலைமைத்துவ திறன்கள் மற்றும் பொதுச் சொற்பொழிவு திறன்களை ஊக்குவிக்கும் நோக்கில் சிஐ... மேலும் பார்க்க

கோபி வட்டத்தில் மக்களுடன் முதல்வா் முகாம்: ரூ.1.29 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

கோபி வட்டத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்களில் 114 பயனாளிகளுக்கு ரூ.1.29 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் வழங்கினாா். கோபி வட்டம் சிறுவலூா... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா்மட்டம் 90.53 அடியை எட்டியது

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நீா்வரத்து அதிகரித்ததால் பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 90.53 அடியை எட்டியது. தமிழகத்தில் மேட்டூா் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நீா்த்தேக்கம... மேலும் பார்க்க