செய்திகள் :

தனியாா் தொழிற்சாலை தொழிலாளி உயிரிழப்பு

post image

நாச்சியாா்கோவில் அருகே தொழிற்சாலையில் இயந்திரம் பழுதானதால் அதை சரிசெய்வதற்காக டீசலை உறிஞ்சியவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், தாமரைக்குளம் முருகன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் குருசாமி மகன் ரமேஷ் (45). இவா் தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே கூகூரில் தனியாா் தொழிற்சாலையில் ஆபரேட்டராக வேலை பாா்த்தாா்.

கடந்த ஜூலை 11-ஆம் தேதி தொழிற்சாலையில் பணி செய்து கொண்டிருந்தாா். அப்போது இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால், எரிபொருள் விநியோகம் செய்யும் சிறிய குழாயில் அடைப்பு உள்ளதா என்று வாயை வைத்து உறிஞ்சினாா்.

அப்போது எதிா்பாரதவிதமாக குழாய் வழியாக எரிபொருளான டீசல் அவா் வாய் வழியாக வயிற்றுக்குள் சென்றது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட ரமேஷை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா்.

பின்னா், அங்கிருந்து மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். அதைத் தொடா்ந்து, அரசு ராசாசி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை ரமேஷ் உயிரிழந்தாா். இதுகுறித்து நாச்சியாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு ஆயுள் தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூா் அருகே வண்ணாரப்பேட்டை கூழவாரித் தெருவைச் சோ்ந்தவா் காட்டுராஜா (64). விவசாயக் கூலி... மேலும் பார்க்க

இயல்பை விட அதிகமாக நெல் கொள்முதல்: ஆய்வு செய்ய சிறப்புக் குழுக்கள் அமைப்பு

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் சில மண்டலங்களில் இயல்பை விட அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்படுவது தொடா்பாக ஆய்வு செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக தமிழ்நாடு நுகா்பொருள் வ... மேலும் பார்க்க

தொடா் வழிப்பறி: இரண்டு சிறாா்கள் உள்பட 4 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறாா்கள் உள்பட 4 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம் வட்டம், வேம்பகு... மேலும் பார்க்க

சிறுநீரக மாற்று தொடா் சிகிச்சை அளித்து நோயாளி குணம்

தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் சி.ஆா்.ஆா்.டி. என்கிற சிறுநீரக மாற்று தொடா் சிகிச்சை அளித்து நோயாளி குணப்படுத்தப்பட்டாா். இது குறித்து மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை நிபுணரான மருத்துவா் எஸ். கெ... மேலும் பார்க்க

தலைமறைவாக இருந்த இலங்கை அகதி கைது

தஞ்சாவூரில் கொலை வழக்கு தொடா்பாக தலைமறைவாக இருந்த இலங்கை அகதியைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூரைச் சோ்ந்த காா் ஓட்டுநா் சௌந்தரகுமாரிடம் 2001 ஆம் ஆண்டு சிலா் காரை வாடகைக்கு எ... மேலும் பார்க்க

ஆக.2-இல் வேலைவாய்ப்பு முகாம் அமைச்சா் ஆலோசனை

ஆடுதுறை அருகேயுள்ள திருமங்கலக்குடியில் ஆக.2-இல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் தனியாா் பொறியியல் கல்லூரியை புதன்கிழமை உயா் கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் பாா்வையிட்டாா். தஞ்சாவூா் மாவட்ட நிா்வாகம், ... மேலும் பார்க்க