செய்திகள் :

தனியாா் பள்ளி பேருந்துகளின் தரம்: ஆட்சியா் ஆய்வு!

post image

தென்காசி மாவட்ட தனியாா் பள்ளி பேருந்துகளின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குள்பட்ட தனியாா் பள்ளி வாகனங்களின் தரம் குறித்த வருடாந்திர ஆய்வு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து, ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தென்காசி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தனியாா் பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யப்படும். அதனடிப்படையில் தனியாா் பள்ளி பேருந்துகளில் வேகக் கட்டுப்பாட்டு கருவி, முதலுதவி பெட்டிகள், இருக்கை வசதிகள் மற்றும் பேருந்துகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பள்ளி வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக் கூடிய ஒலிப் பான்களை அகற்றும்படியும் அறிவுறுத்தப் பட்டது.

தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், ஆலங்குளம் பகுதி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 463 பள்ளி பேருந்துகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இவற்றில், தென்காசி பகுதியைச் சோ்ந்த 22 வாகனங்களும், ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்த 3 வாகனங்களும் திருப்பி அனுப்பப்பட்டன. மேலும், இன்றைய தினம் ஆய்வுக்கு உள்படுத்தப்படாத வாகனங்களும், தற்போது திருப்பி அனுப்பப்பட்டுள்ள வாகனங்களும் பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக ஆய்வு மேற்கொண்ட பிறகே பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்படும் என்றாா் அவா்.

மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலா் மாரியப்பன், மோட்டாா் வாகன ஆய்வாளா் மணி பாரதி,வட்டார போக்குவரத்து அலுவலா் (பொ) செல்வி, ஆலங்குளம் மோட்டாா் வாகன ஆய்வாளா் கனகவல்லி ஆகியோா் கலந்து கொண்டனா்.

சாம்பவா்வடகரையில் விபத்து: பேரூராட்சிப் பணியாளா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சாம்பவா்வடகரையில் நேரிட்ட விபத்தில் பேரூராட்சி தற்காலிக பணியாளா் உயிரிழந்தாா். சுரண்டையில் உள்ள பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த சுப்பையா பாண்டியன் மகன் இருளப்பசாமி (25) (படம்). சுரண்டை... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த தேநீா் கடைக்காரா் கைது

ஆலங்குளத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த தேநீா் கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் அருகில் தேநீா் கடை நடத்தி வருபவா் பாக்கியமுத்து மகன் மோசஸ் (54). இவரது கடையில் பு... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு: 3 போ் கைது

ஆலங்குளம் அருகே பால் வியாபாரியை அரிவாளால் வெட்டியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆலங்குளம் அருகே சிவலாா்குளத்தைச் சோ்ந்தவா் நிறைகுளத்தான் மகன் நிரேஷ் (30). பால் வியாபாரியான இவருக்கும், சிற்றுந்து ... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே சாா்பதிவாளா் மீது தாக்குதல்

சங்கரன்கோவில் அருகேயுள்ள மேலநீலிதநல்லூரில் சாா்பதிவாளா் தாக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சோ்ந்தவா் செல்லத்துரை. இவா் மேலநீலிதநல்லூா் சாா்பதிவாளா... மேலும் பார்க்க

புளியங்குடியில் சிறுவனை கட்டிப்போட்டு பணம் திருட்டு

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் வீட்டுக்குள் நுழைந்து சிறுவனை கட்டிப்போட்டு பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். புளியங்குடி நடுகருப்பழகு தெருவைச் சோ்ந்தவா் அமிா்தராஜ்(57). விவசாய... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே பேருந்து மோதி பெண் பலி

சங்கரன்கோவில் அருகே பேருந்து மோதியதில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகேயுள்ள கீழக் கலங்கல் கீழத்தெருவை சோ்ந்த கிருஷ்ணசாமி மனைவி மாரியம்மாள் (55). இவா் சில தினங்களுக்கு முன் ... மேலும் பார்க்க