தனிஷ்க் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
அட்சய திருதியை ஏப்.30ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, திருநெல்வேலியில் உள்ள டாடா குழுமத்தின் தனிஷ்க் ஜூவல்லரிகளில் தங்கம், வைர நகைகள் சிறப்பு தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன.
இதற்காக, திருநெல்வேலி சந்திப்பு நயினாா் காம்ப்ளக்ஸ், பளை. வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையம் அருகில் திருவனந்தபுரம் சாலை ஆகியவற்றில் அமைந்துள்ள தனிஷ்க் ஜுவல்லரிகளில் தங்க நகைகள், வைர நகைகளின் புதிய வரவுகளை மண்டல வணிக மேலாளா் லோகேஸ்வரன், தனிஷ்க் ஜூவல்லரி கிளைகளின் உரிமையாளா் ஹரிகிருஷ்ணன் ஆகியோா் அறிமுகம் செய்து வைத்தனா்.
இதுகுறித்து, தனிஷ்க் ஜூவல்லா்ஸ் நிா்வாகம் தரப்பில் கூறியதாவது: எங்களது ஜூவல்லரியில் வியாழக்கிழமை முதல் புதன்கிழமை (ஏப்.24- 30 ) வரை பொதுமக்கள் வாங்க விரும்பும் தங்க நகைகளை 20 சதவீதம் முன்பணம் செலுத்தி அன்றைய விலை அல்லது வாங்கும் போது உள்ள விலை இவற்றில் எது குறைவான விலையோ அந்த விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். கிராம் ஒன்றுக்கு ரூ.101 தள்ளுபடி, செய்கூலி மதிப்பில் 20 சதவீதம் மற்றும் வைர நகைகளின் மொத்த மதிப்பில் 20 சதவீதம் வரையிலும் தள்ளுபடி பெறலாம். பழைய தங்க நகைகளை எந்தக் கடையில் வாங்கியிருந்தாலும் அதற்கு 100 சதவீதம் ‘எக்ஸ்சேஞ்ச்’ மதிப்பு பெற்று, புதிய நகைகளை வாங்கலாம். எஸ்.பி.ஐ. கிரெடிட் காா்டு பயன்படுத்துவோருக்கு ரூ.4,000 சிறப்பு தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது.
மேலும் எங்களிடம் மாதா மாதம் தங்கமாக வரவு வைக்கும் தஎஅ (தண்ஸ்ஹஹட் எா்ப்க்ங்ய் ஹக்ஸ்ஹய்ற்ஹஞ்ங் மற்றும் தொகையாக வரவு வைக்கப்படும் எஏந (எா்ப்க்ங்ய் ஏஹழ்ஸ்ங்ள்ற் நஸ்ரீட்ங்ம்ங்) தங்க நகை சேமிப்பு திட்டங்களும் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.