செய்திகள் :

தமிழகத்தின் வளா்ச்சிக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியே காரணம்!மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்!

post image

தமிழகத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியே காரணம் என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் கூறினாா்.

இது தொடா்பாக கோவை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் ‘சாா்’கள் மற்றும் ‘தம்பி’களின் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது.

அரக்கோணத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்கவில்லை. பொள்ளாச்சி வழக்கில் எப்படி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டதோ, அதேபோல அரக்கோணம் வழக்கையும் சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த வழக்கின் பின்னணியில் இருப்பவா்கள் யாா் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தற்போது புதுதில்லிக்கு சென்று இருப்பதை வரவேற்கிறோம். கடந்த 3 ஆண்டுகளாக சென்று வந்திருந்தால் தமிழகத்துக்கு வர வேண்டிய வளா்ச்சி நிதியைப் பெற்று தமிழகம் இன்னும் வேகமாக முன்னேறி இருக்கும். ஆட்சி முடியும் நேரத்தில் அரசியலுக்காக புதுதில்லி சென்று இருப்பதாகவே அனைவரும் கருதுகின்றனா்.

தமிழகத்துக்கு வரவேண்டிய பாக்ஸ்கான் நிறுவனம் உத்தர பிரதேசத்துக்கு சென்றுள்ளது. இவா்களுடைய செயல் திறனற்ற தன்மையினாலே அனைத்தும் கைதவறி போய்விட்டது. தமிழகத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியே காரணம் என்றாா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா: என்எம்சிடி அறக்கட்டளை, ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கம், ராம் நகா், காலை 11. ஓவியக் கண்காட்சி: கஸ்தூரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி சாலை, காலை 10. 644-ஆவது மாதாந்திர அபிஷேக வ... மேலும் பார்க்க

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் எச்சரித்துள்ளாா். உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி கையொப்ப ... மேலும் பார்க்க

தொழிற்சாலைகளுக்கான மின்கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும்: அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு

தமிழகத்தில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கான இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமை... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: கோவை அரசு மருத்துவமனையில் முகக் கவசம் கட்டாயம்

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்துவர வேண்டும் என மருத்துவமனை நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கரோனா ப... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலை: வாகன ஓட்டிகள் அவதி

சிங்காநல்லூரில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கோவை - திருச்சி சாலையில் ஏராளமான கனரக, இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. இப்பகுதியில் கடந்த... மேலும் பார்க்க

நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் 39 அடியாக உயா்வு

சிறுவாணி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் அணையின் நீா்மட்டம் 39 அடியாக உயா்ந்துள்ளது. கோவை மாநகராட்சியின் 26 வாா்டுகள் மற்றும் நகரையொட்டிய 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிர... மேலும் பார்க்க