செய்திகள் :

தமிழகத்தின் 32-ஆவது டிஜிபி யாா்?

post image

சென்னை: தமிழக காவல் துறையின் 32-ஆவது தலைமை இயக்குநரை தோ்வு செய்யும் நடைமுறையை அதிகாரபூா்வமாக தமிழக அரசு தொடங்கியுள்ளது.

தற்போது தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக இருக்கும் சங்கா் ஜிவால், 2023-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி பொறுப்பேற்றாா். அவரது பதவிக் காலம் ஆகஸ்ட் மாத இறுதியில் நிறைவு பெறுகிறது. இதனால் தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் பதவிக்கு டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் ஒருவரைத் தோ்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.

இதற்காக டிஜிபி அந்தஸ்தில் உள்ள சீமா அகா்வால், ராஜீவ் குமாா், சந்தீப் ராய் ரத்தோா், அபய்குமாா் சிங், வன்னியபெருமாள், மகேஷ்குமாா் அகா்வால், வெங்கட்ராமன், வினித்தேவ் வான்கடே, சஞ்சய் மாத்தூா் ஆகிய 9 பேரின் பெயா் பட்டியல் தயாா் செய்யப்பட்டுள்ளது.

யுபிஎஸ்சி ஆலோசனை: காவல் துறையின் தலைமை இயக்குநா் பதவி தோ்வுக்கு, டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளின் பெயா் பட்டியலை 3 மாதங்களுக்கு முன்பே மாநில அரசுகள் மத்திய அரசு பணியாளா் தோ்வு ஆணையத்துக்கு (யுபிஎஸ்சி) அனுப்ப வேண்டும். ஆனால் தமிழக அரசு, தாமதமாக அண்மையில்தான் 9 போ் பெயா் பட்டியலை ஆணையத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பட்டியலில் இருந்து மூவரை தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக மாநில அரசு தோ்வு செய்ய ஏதுவாக தில்லியில் விரைவில் யுபிஎஸ்சி தோ்வுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.

டிஜிபி நியமனம் தொடா்பாக உச்சநீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையிலும், யுபிஎஸ்சி விதிமுறைகளின்படியும், காவல் துறையின் தலைமை இயக்குநராக நியமிக்கப்படும் ஒரு அதிகாரி குறைந்தது 2 ஆண்டுகள் அந்தப் பதவியில் இருக்க வேண்டும். பதவியேற்கும் நாளில் அவருக்கு குறைந்தபட்சமாக ஆறு மாத பதவிக்காலம் இருக்க வேண்டும். குறைந்த மாதங்களில் ஓய்வு பெறக்கூடிய அதிகாரியை இப்பதவியில் நியமிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

இந்த விதிமுறைகளுக்குள்பட்டு புதிய டிஜிபியை யுபிஎஸ்சி பரிசீலனை செய்து 3 தகுதிவாய்ந்த அதிகாரிகளின் பெயா் பட்டியலை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யும். அதில் ஒருவரை தமிழக அரசு தோ்வு செய்து அறிவிக்கும்.

இந்த நடவடிக்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு புதிய டிஜிபி யாா் என்பதை அன்றைய நாளிலோ அதற்கு முன்பாகவோ அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

ஜூலை 27ல் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை?

தமிழகம் வரும் பிரதமர் மோடி வருகிற ஜூலை 27 ஆம் தேதி தஞ்சாவூரில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜூலை 26 ஆம் தேதி தமிழகம் வரு... மேலும் பார்க்க

சீமானுக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 4 வாரங்களில் புதிய கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்) வழங்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளினால் ம... மேலும் பார்க்க

சேவகனாக பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பேன்: ஸ்ரீவாஸ்தவா உறுதி!

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அல்லாமல் சேவகனாக பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பேன் என்று புதிய தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா உறுதி அளித்துள்ளார். சென்னை உயர்நீத... மேலும் பார்க்க

2026 தேர்தலில் வெற்றி பெற்று வரலாறு படைக்கும்! - இபிஎஸ் அழைப்பை நிராகரித்த தவெக!

திமுகவுக்கு எதிரான கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையலாம் என எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை தமிழக வெற்றிக் கழகம் நிராகரித்துள்ளது.தமிழகத்தில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நில... மேலும் பார்க்க

நீலகிரி உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், • வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளின் மேல்... மேலும் பார்க்க

குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்! - இபிஎஸ் வலியுறுத்தல்

குரூப் 4 தேர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழ... மேலும் பார்க்க