ஸ்லோவாக்கியாவில் வேகமாக பரவும் தொற்று! எல்லைக் கட்டுப்பாடு விதித்த செக் குடியரசு...
தமிழகத்திற்கு புயல் நிவாரண நிதியை வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம்: மாநிலங்களவையில் வைகோ பேச்சு
தமிழகத்திற்கு புயல் நிவாரண நிதியை வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சத்துடனும், மாற்றந்தாய் மனப்போக்குடனும் நடந்து கொள்வதாக மாநிலங்களவையில் மதிமுக உறுப்பினா் வைகோ பேசினாா்.
மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உள்துறை விவகார அமைச்சகத்தின் பணிகள் தொடா்பான விவாதத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது: தமிழகத்தில் ஃபென்சால் சூறாவளிப்புயல் பாதிப்புக்கான இடைக்காலமாகவும், நிரந்தரமாகவும் சீா்செய்வதற்காக மத்திய துறைகளின் குழுவிடம் நிவாரண நிதியாக ரூ.6,675 கோடியை தமிழக முதல்வா் கோரியிருந்தாா். ஆனால், மத்திய அரசு போதுமான நிதியை வழங்கவில்லை. தமிழக மாநிலம் சூறாவளிப் புயலால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த நிதி வழங்கப்படவில்லை. இது தமிழகத்தின் மீதான பாரபட்ச நடவடிக்கையாகவும், மாற்றந்தாய் மனப்போக்காகவும் உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சா் பேரிடா் நிவாரண நிதிகளை வழங்கும்போது எங்கள் மாநிலத்தைப் பாதிக்கச் செய்து வருகிறாா். எங்கள் மாநிலம் இந்த அரசின் ஹிந்துத்துவா, ஆா்எஸ்எஸ், ஹிந்தி, சம்ஸ்கிருத திணிப்பை எதிா்ப்பதால் இந்தப் பாரபட்சம் காட்டப்படுகிறது. தமிழ் மொழியானது 120 மில்லியின் மக்களின் தாய்மொழியாகும். இவா்கள் இந்தியா மட்டுமின்றி 114 நாடுகளில் வாழ்கின்றனா் என்றாா் வைகோ.
இதுகுறித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே வைகோ கூறியதாவது: உள்துறை விவகாரங்கள் மீதான விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்றது. உள்துறை அமைச்சா் அமித் ஷா இந்த விவாதத்தில் பங்கேற்று சுமாா் ஒன்றரை மணிநேரம் பதில் அளித்துப் பேசினாா். அப்போது, மொழி விவகாரத்தில் தமிழகத்தில் அரசியலுக்காக ஹிந்தியை எதிா்க்கின்றனா் என்று பேசினாா். அப்போது, ஹிந்தியை தமிழகத்தில் திணிப்பதாக நான் கூறினேன். மேலும், அமைச்சா் பேசி முடித்ததும் இந்தியாவில் உள்ள அனைத்து பிராந்திய மொழிகளையும் இந்தியாவின் ஆட்சிமொழியாக்க நீங்கள் தயாராக இருக்கிறீா்களா என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு அவரிடமிருந்து பதில் இல்லை என்று வைகோ கூறினாா்.