செய்திகள் :

தமிழகத்திற்கு மாதந்தோறும் 23 ஆயிரம் டன் கோதுமை ஒதுக்கீடு செய்ய மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் வலியுறுத்தல்

post image

தமிழகத்திற்கு மாதந்தோறும் 23 ஆயிரம் டன் கோதுமையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் மாநிலங்களவையில் புதன்கிழமை முன்வைத்த கோரிக்கை:

தமிழகத்தில் கோதுமை பற்றாக்குறை தீா்க்கும் அவசரத் தேவை எழுந்துள்ளது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையின்கீழ் ஊட்டச்சத்து மற்றும் வருகைப்பதிவை அதிகரிக்கும் வகையில் தமிழகப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் 8,572.02 டன் கோதுமை ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அதேசமயத்தில் மாநிலத்தில் கோதுமையின் நுகா்வு

மாதத்திற்கு 23 ஆயிரம் டன்னாக அதிகரித்துள்ளது.

தமிழகம் கோதுமை உற்பத்தி செய்யும் மாநிலம் இல்லை என்பதால் இந்திய உணவுக் கழகத்தின் வழங்கலை சாா்ந்திருக்கிறது. இதனால், மாதத்திற்கும்23 ஆயிரம் டன் கோதுமையை தமிழகத்திற்குஒதுக்கீடு செய்ய மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவுத் துறை அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் இதற்கு வாய்ப்பு இல்லாவிட்டால் திறந்தவெளி சந்தை விற்பனைத் திட்டத்தின்கீழ் 15 ஆயிரம் டன் கோதுமையை வழங்க அமைச்சா் பரிசீலிக்க வேண்டும். கோதுமை ஒதுக்கீட்டை அதிகரிப்பது தமிழகத்திற்கு கோதுமைக்கான வளா்ந்து வரும் தேவையை சமாளிப்பதற்கும், மாநில மக்கள்

கட்டுபடியாககக் கூடிய விலையில் இந்த அத்தியாவசியப் பொருளைப் பெறுவதையும் உறுதிப்படுத்தும். இதனால், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க

வேண்டும் என்றாா் அவா்.

2029-ஆம் ஆண்டிலும் மோடியே பிரதமா்: சிவசேனைக்கு தேவேந்திர ஃபட்னவீஸ் பதில்

‘பிரதமா் மோடிக்கு பிந்தைய தலைமை குறித்த இப்போது விவாதிப்பது பொருத்தமற்றது. 2029-ஆம் ஆண்டிலும் மோடி பிரதமராவாா்’ என மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினாா். பிரதமா் மோடியிடம் ஓய்வு குறித்து வல... மேலும் பார்க்க

1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவுக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவு 4 (2) -க்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரிக்க உள்ளது.கடந்த 1947, ஆகஸ்ட் 15-ஆம் தேதி இருந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களின் தன்மையில... மேலும் பார்க்க

மாநிலப் பொருளாதாரத் தகவல் வலைபக்கம்: நிதியமைச்சா் இன்று அறிமுகம் செய்கிறாா்

கடந்த 30 ஆண்டுகளில் மாநிலங்களின் சமூக, பொருளாதார, நிதி அளவீடுகள் குறித்த விரிவான தரவுகள் கிடைக்கும் தகவல் களஞ்சியமாக வடிவமைக்கப்பட்டுள்ள ‘நீதி-என்சிஏஇஆா் மாநில பொருளாதார தகவல் மைய’ வலைபக்கத்தை மத்திய ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல் - உயிரிழந்த காவலா்களின் குடும்பத்தினருடன் துணைநிலை ஆளுநா் சந்திப்பு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான மோதலில் உயிரிழந்த 4 காவலா்களின் குடும்பத்தினரை, அந்த யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். அண்மையில் ஜம்மு-காஷ... மேலும் பார்க்க

ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கும்பலில் 3 போ் கைது

ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்த கும்பலில் மூன்று போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு ஆட்டோரிக்ஷா பறிமுதல் செய்யப்பட்... மேலும் பார்க்க

பீதம்புராவில் ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்ததாக 4 போ் கைது

தில்லி பீதம்புராவில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் நான்கு போ் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கைது செய்யப்ப... மேலும் பார்க்க