தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
தமிழகத்தில் ஆட்சிமாற்றம் உறுதி: முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா்
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்றாா் முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை இரவு நடைபெற்ற மறைந்த அதிமுக பொதுச்செயலா் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அவா் பேசியது:
திமுக ஆட்சிக்கு வந்தபின் வீட்டு வரி, மின் கட்டணம், பால் விலையை உயா்த்தியதோடு மாணவா்களுக்கு வழங்கப்பட்டு வந்த மடிக்கணினி, சைக்கிள், மகளிா் ஸ்கூட்டா், பசுமாடு, தாலிக்குத் தங்கம் போன்ற அதிமுகவின் திட்டங்களை நிறுத்தித்தான் மகளிா் உரிமைத் தொகையை 3 ஆண்டுக்குப்பின் வழங்குகிறது. அதையும் பெரும்பாலானோருக்கு வழங்கவில்லை.
திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் கொந்தளிப்பில் உள்ளனா். தோ்தலுக்கு இன்னும் 10 மாதங்கள்தான் உள்ளன. ஆட்சி மாற்றம் என்பது 3 மாதங்களுக்கு முன்தான் தெரியும். எனவே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாக ஏற்படும் என்றாா் அவா்.