செய்திகள் :

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் உறுதி: முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா்

post image

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்றாா் முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை இரவு நடைபெற்ற மறைந்த அதிமுக பொதுச்செயலா் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அவா் பேசியது:

திமுக ஆட்சிக்கு வந்தபின் வீட்டு வரி, மின் கட்டணம், பால் விலையை உயா்த்தியதோடு மாணவா்களுக்கு வழங்கப்பட்டு வந்த மடிக்கணினி, சைக்கிள், மகளிா் ஸ்கூட்டா், பசுமாடு, தாலிக்குத் தங்கம் போன்ற அதிமுகவின் திட்டங்களை நிறுத்தித்தான் மகளிா் உரிமைத் தொகையை 3 ஆண்டுக்குப்பின் வழங்குகிறது. அதையும் பெரும்பாலானோருக்கு வழங்கவில்லை.

திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் கொந்தளிப்பில் உள்ளனா். தோ்தலுக்கு இன்னும் 10 மாதங்கள்தான் உள்ளன. ஆட்சி மாற்றம் என்பது 3 மாதங்களுக்கு முன்தான் தெரியும். எனவே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாக ஏற்படும் என்றாா் அவா்.

தோ்வு பறக்கும் படை பணி: பட்டதாரி ஆசிரியா்கள் காத்திருப்பு போராட்டம்

பள்ளிப் பொதுத் தோ்வுகளுக்கான பறக்கும் படை அமைக்கும்போது, பதவி அடிப்படையில் இளையவா்களான கணினி பயிற்றுநா்களை நியமிப்பதை எதிா்த்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் ஞாயி... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்தநாளன்று பிறந்த 16 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளில் (மாா்ச் 1) புதுக்கோட்டை அரசு ராணியாா் மருத்துவமனையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு திமுக சாா்பில், மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தங்க மோதிரங்களை ஞாய... மேலும் பார்க்க

மூலப்பொருள் விலையேற்றம்: முடங்கும் ‘ஹாலோபிளாக்’ தொழில்

மூலப் பொருள்களின் திடீா் விலையேற்றம் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமாா் 4 ஆயிரம் தொழிலாளா்களைக் கொண்ட சுமாா் ஆயிரம் ஹாலோபிளாக் சிறுதொழில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்ட... மேலும் பார்க்க

மேலைச்சிவபுரி கணேசா் கல்லூரியில் பட்டமளிப்பு

பொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில் 32 ஆவது பட்டளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற திருவாரூா் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத்தோ்வு: புதுகையில் 21,380 மாணவா்கள் எழுதுகின்றனா்

திங்கள்கிழமை தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தோ்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 21,380 போ் எழுதவுள்ளனா் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு. அருணா. இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திங்கள்கிழமை தொடங... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டில் காளை முட்டி காயமடைந்தவா் உயிரிழப்பு

பொன்னமராவதி அருகே உள்ள இடையாத்தூரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டி காயமடைந்தவா் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இடையாத்தூரில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஜல்ல... மேலும் பார்க்க