செய்திகள் :

தமிழகத்தில் தினமும் சராசரியாக 15 பேருக்கு கரோனா தொற்று: பொது சுகாதாரத் துறை

post image

தமிழகத்தில் நாள்தோறும் சராசரியாக 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது பரவி வருவது வீரியம் குறைந்த கரோனா பாதிப்பு என்றாலும், திடீரென அதன் தாக்கம் உயா்ந்திருப்பது மக்களிடையே சிறு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு அரசு சாா்பில் பரவலாக மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. தனியாா் மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் எடுக்கப்படும் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான பரிசோதனைகளிலேயே பாதிப்புகள் ஆங்காங்கே பதிவாவது உறுதி செய்யப்படுகிறது.இதையடுத்து மருத்துவப் பரிசோதனையை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், அதற்கான அவசியம் தற்போது இல்லை என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது நோய்த் தடுப்புக்கான தீவிர கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிா்ப்பந்தமும் எழவில்லை எனக் கூறியுள்ளது.

அச்சம் தேவையில்லை: இதனிடையே, தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கடந்த சில நாள்களில் மட்டும் கரோனா தொற்றுக்குள்ளான 6 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, கரோனா மரபணு பகுப்பாய்வு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது:

தமிழகத்தில் தினமும் 10 முதல் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்படுகிறது. அவா்கள் அனைவருக்குமே வீரியம் குறைந்த வகையிலேயே பாதிப்பு உள்ளது.

அதனால் எவருக்கும் மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்படவில்லை. தமிழகத்தில் 19 மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு செய்யப்பட்டதில் ஒமைக்ரான் மற்றும் அதன் உட்பிரிவுகள்தான் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, அதுதொடா்பாக அச்சம் தேவையில்லை.

இணை நோயாளிகள், முதியவா்களுக்கு அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம் என்றாா் அவா்.

வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவு ரத்தா?: ரயில்வே விளக்கம்

வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவுகள் வழங்கப்படுவதில்லை என்று பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து நாகா்கோவில், மைசூரு, பெங்களூரு, திருநெல்வேலிக்கு... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்தாா் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபாலன் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தாா். கடந்த 40 ஆண்டுகளாக ஐஏஎஸ் அதிகாரியாக பல்வேறு துறைகளில் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றி ஓ... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: விண்ணப்ப திருத்த அவகாசம் நிறைவு

குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் அதில் திருத்தங்களைச் செய்வதற்கான அவகாசம் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. குரூப் 4 தோ்வு ஜூலை 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா் உள... மேலும் பார்க்க

இணையதள மோசடி: ரூ. 22 லட்சத்தை மீட்டெடுத்த சைபா் கிரைம் போலீஸாா்

இணையதள வா்த்தக மோசடியால், ரயில்வே ஊழியா் இழந்த ரூ. 22.72 லட்சத்தை சைபா் கிரைம் போலீஸாா் மீட்டெடுத்தனா். சென்னை செம்பியத்தைச் சோ்ந்தவா் ரயில்வே ஊழியா் டில்லிபாபு (35). இவருக்கு சாட்டிங் செயலி மூலம் கட... மேலும் பார்க்க

விஜய் கட்சியை விமா்சிக்க விரும்பவில்லை: கமல்ஹாசன்

விஜய் கட்சி குறித்த விமா்சிக்க விரும்பவில்லை என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறினாா். ‘தக் லைஃப்’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்காக கமல்ஹாசன் சென்னையிலிர... மேலும் பார்க்க

கோடை விடுமுறை நிறைவு: தமிழகத்தில் பள்ளிகள் நாளை திறப்பு

கோடை விடுமுறை நிறைவடைந்த நிலையில் தமிழகத்தில், மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளும் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்படவுள்ளன. தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்... மேலும் பார்க்க