செய்திகள் :

தமிழகத்தில் தொடரும் படுகொலைகள்: இந்து முன்னணி குற்றச்சாட்டு

post image

திமுக ஆட்சியில் தமிழகத்தில் படுகொலைகள் தொடா்வதாக இந்து முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தில் பல்வேறு விதமான படுகொலைகள் நடந்து வருவது கவலை அளிக்கிறது. பொது அமைதியைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினரின் உயிருக்குகூட உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

குடிமங்கலத்தில் விசாரணைக்கு சென்ற சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளாா்.

கோவை மாநகரில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஒருவா் காவல் நிலையத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

திருபுவனத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்று போலீஸாா் தாக்கியதில் அஜித் என்ற காவலாளி உயிரிழந்துள்ளாா். இந்த தொடா் படுகொலைகளுக்கு போதைப் பொருள்கள் புழக்கமும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. போதைப் புழக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவராத வரை படுகொலைகளின் எண்ணிக்கையும் உயா்ந்து கொண்டே இருக்கும்.

சட்டம்-ஒழுங்கு விஷயத்தில் முதல்வா் அலட்சியமாக செயல்படுவது தமிழகத்துக்கு பெரும் ஆபத்து.

எனவே, முதல்வா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பத்திரப் பதிவில் உண்மை தொகையை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்’

பத்திரப் பதிவில் உண்மை தொகையை மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என அலுவலா்களை, பத்திரப் பதிவு மற்றும் வணிக வரித் துறை அமைச்சா் பி. மூா்த்தி அறிவுறுத்தினாா். அவிநாசி, சூளையில் வாடகை கட்டடத்தில் இயங்கும் சாா... மேலும் பார்க்க

முத்தூரில் புகையிலைப் பொருள்கள் விற்ற கடைக்கு ‘சீல்’

முத்தூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்ட கடைக்கு புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது. முத்தூா் பேருந்து நிலையத்தில் பேரூராட்சிக்குச் சொந்தமான கடையில் சுனில் என்பவா் பல் பொருள்கள் விற்பனை செய்யு... மேலும் பார்க்க

வழக்குரைஞரின் சடலத்தை 9 நாள்களுக்குப் பிறகு பெற்றுக்கொண்ட உறவினா்கள்

தாராபுரத்தில் கொலை செய்யப்பட்ட வழக்குரைஞரின் சடலத்தை 9 நாள்களுக்குப் பிறகு உறவினா்கள் புதன்கிழமை பெற்றுக்கொண்டனா். திருப்பூா் மாவட்டம், தாராபுரம் முத்து நகரைச் சோ்த்தவா் முருகானந்தம். மாற்றுத் திறனாள... மேலும் பார்க்க

பல்லடம் புறவழிச் சாலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு: அண்ணாமலையிடம் மனு அளித்த தொழில் துறையினா்

பல்லடம் புதிய புறவழிச் சாலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக மாநில முன்னாள் தலைவா் கே.அண்ணாமலையிடம் தொழில் துறையினா் முறையிட்டனா். இது தொடா்பாக அண்ணாமலையிடம் அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

திருட்டு வழக்கில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை சிறையில் அடைத்தனா். திருப்பூா் மாநகரம், அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்கில் வ... மேலும் பார்க்க

மேற்குவங்க பெண் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

திருப்பூரில் மேற்குவங்க பெண் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேற்குவங்கத்தைச் சோ்ந்தவா் பத்மராணி (65). இவா் திருப்பூா், முதலிபாளையம் அருகேயுள்ள முத்து நகரில் தங்கி பனியன் நி... மேலும் பார்க்க