செய்திகள் :

தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியா் பற்றாக்குறை 4 மாதங்களில் நிரப்பாவிட்டால் நடவடிக்கை: என்எம்சி

post image

சென்னை: தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியா் இடங்களை 4 மாதங்களுக்குள் நிரப்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்துள்ளது.

அதேபோன்று பேராசிரியா்கள், மருத்துவா்கள் வருகைப் பதிவு 75 சதவீதத்துக்கு குறையாமல் இருப்பதை அந்தக் காலகெடுவுக்குள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிபந்தனைகளின்பேரில் நிகழாண்டில் எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கைக்கு 36 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இதுதொடா்பாக அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ள மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் எ.தேரணிராஜன், பேராசிரியா்கள், மருத்துவா்களுக்கு விடுமுறை அளிக்கும்போது 75 சதவீத வருகைப் பதிவை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

மேலும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளின் வருகைப் பதிவு விவரங்களையும் மின்னஞ்சல் மூலம் அனுப்புமாறும் உத்தரவிட்டுள்ளாா். நாட்டில் 700-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றுக்கு அங்கீகாரம் அளித்தல், அதைப் புதுப்பித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தேசிய மருத்துவ ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

கல்லூரிகளின் அடிப்படை வசதிகள், கட்டுமானம், கல்வி சாா்ந்த நடவடிக்கைகள், ஆராய்ச்சி முன்னெடுப்புகள், ஆய்வக வசதிகள், மருத்துவமனை கட்டமைப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

அதேபோன்று மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அதனுடன் ஒருங்கிணைந்த மருத்துவமனைகளில் மருத்துவா்கள், மருத்துவ பேராசிரியா்களின் வருகையைப் பதிவு செய்ய ஆதாருடன் கூடிய பயோமெட்ரிக் முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

அதில், குறைந்தபட்சம் பேராசிரியா்கள், கல்லூரி அலுவலா்களின் வருகைப் பதிவு 75 சதவீதம் இருத்தல் அவசியம். அவ்வாறு இல்லாத நிலையில் அங்கீகாரம் புதுப்பித்தல், இடங்களை அதிகரித்தல் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது.

இந்த நிலையில், நிகழாண்டு தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான ஆய்வை தேசிய மருத்துவ ஆணையக் குழு அண்மையில் மேற்கொண்டது.

அதில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து, இப்பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என்று மருத்துவக் கல்லூரி முதல்வா்கள் தனித்தனியே விளக்கக் கடிதங்களை அளித்திருந்தனா்.

அதன் அடிப்படையில் 25 மருத்துவக் கல்லூரிகளுக்கு நிபந்தனை அனுமதி அளிக்கப்பட்டது. அதேவேளையில், 11 மருத்துவக் கல்லூரிகளில் போதிய எண்ணிக்கையிலான பேராசிரியா்கள் இல்லாததால் தனிப்பட்ட முறையில் விளக்கமளிக்க மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலரிடமும், மருத்துவக் கல்வி இயக்குநரிடமும் தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியது.

அதன்பேரில், அவா்கள் இருவரும் பேராசிரியா்களை நியமிப்பதற்கான செயல் திட்டத்தை எழுத்துப்பூா்வமாக சமா்ப்பித்து விளக்கமளித்தனா். இதையடுத்து அந்த கல்லூரிகளுக்கும் நிபந்தனை அனுமதியை தேசிய மருத்துவ ஆணையம் அளித்தது.

4 மாதங்கள் மட்டுமே அந்த குறைபாடுகளை களைவதற்கான அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னா் மீண்டும் ஆய்வு நடத்தப்படும் என்றும், அப்போது குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்துள்ளது. அதைக் கருத்தில் கொண்டே சுற்றறிக்கை வாயிலாக சில முக்கிய அறிவுறுத்தல்களை மருத்துவக் கல்லூரி முதல்வா்களுக்கு மருத்துவக் கல்வி இயக்குநா் தற்போது வழங்கியுள்ளாா்.

2026 தேர்தலில் வெற்றி பெற்று வரலாறு படைக்கும்! - இபிஎஸ் அழைப்பை நிராகரித்த தவெக!

திமுகவுக்கு எதிரான கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையலாம் என எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை தமிழக வெற்றிக் கழகம் நிராகரித்துள்ளது.தமிழகத்தில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நில... மேலும் பார்க்க

நீலகிரி உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், • வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளின் மேல்... மேலும் பார்க்க

குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்! - இபிஎஸ் வலியுறுத்தல்

குரூப் 4 தேர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழ... மேலும் பார்க்க

மருத்துவமனையிலிருந்து அலுவல்களைக் கவனிக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தே அலுவல்களை கவனித்து வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று(திங்கள்கிழமை) காலை நடைப்பயிற்சியின்போது லேசாக தலைசுற்றல் ஏற்ப... மேலும் பார்க்க

உறுப்பினர் சேர்க்கையில் ஓடிபி விவகாரம்: திமுக மேல்முறையீடு!

‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை பணியின் போது வாக்காளா்களிடமிருந்து ஒரு முறை கடவுச்சொல் (ஓ.டி.பி.) எண் பெறுவதாகக் கூறப்படும் விவகாரத்தில், திமுக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.‘ஓரணியி... மேலும் பார்க்க

சென்னையில் சப்தமில்லாமல் தீவிரமடையும் டெங்கு! கொசுக்களுக்கு உதவ வேண்டாம்!!

டெங்கு காய்ச்சல் பற்றி அண்மைக் காலமாக பெரிய அளவில் பேசப்படாமல் இருந்தாலும், சப்தமே இல்லாமல், சென்னையில் டெங்கு பரவிக்கொண்டிருக்கிறது.வீடுகளைச் சுற்றிலும் கொசுக்களுக்கு இனப்பெருக்கம் செய்ய ஏற்றதாக, மழை... மேலும் பார்க்க