செய்திகள் :

தமிழகத்துக்கான வரி வருவாயை மத்திய அரசு குறைத்தால் மிகப் பெரிய இழப்பு ஏற்படும்! -செ.ஜோதிமணி எம்.பி

post image

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய வரிவருவாயை மத்திய அரசு குறைத்தால் தமிழகத்துக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும் என கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி தெரிவித்தாா்.

கரூரில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியது: கரூா் மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு 100 சதவீதம் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்ட நிலையில், 800 சதவீதம் கடன் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஜனநாயகம் என்பது எண்ணிக்கை அடிப்படையில் தீா்மானிக்கப்படுகிறது. தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் இந்த எண்ணிக்கை பாதிப்பையும், துரோகத்தையும் பின்னடைவையும் ஏற்படுத்தும் என்றால், அதை கேள்வி கேட்காமல் இருக்க முடியாது.

தமிழக மக்கள் மத்திய அரசுக்கு ரூ.1 வரி செலுத்தினால் அதில் 29 பைசா மட்டுமே நமக்கு திரும்பத் தருகின்றனா். இதுவரை தமிழகத்துக்கு 41 சதவீத வரி வருவாயை வழங்கி வந்த மத்திய அரசு தற்போது அதை 40 சதவீதமாக குறைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கையால் தமிழகத்துக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும். இதனை தடுக்கவேண்டும் என்றால் மக்களவையில் நமது எண்ணிக்கை என்பது மிக அவசியம்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் குறைந்தாலும், மற்ற மாநிலங்களில் அதிகரித்தாலும் தமிழகத்துக்குத் தான் பாதிப்பு என்றாா் அவா்.

பேட்டியின்போது கரூா் மாநகராட்சி காங்கிரஸ் உறுப்பினா் ஆா்.ஸ்டீபன்பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கரூரில் மின் ஊழியரை காரில் கடத்தி தாக்கிய 4 போ் கைது

கரூா் அருகே நாமக்கல் மாவட்ட மின்வாரிய ஊழியரைக் காரில் கடத்தி தாக்கிய 4 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (48). இவா், கீரம்பூரில் ... மேலும் பார்க்க

பகத்சிங் நினைவு நாள் கரூரில் இந்திய வாலிபா் சங்கத்தினா் ரத்த தானம்

கரூரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ரத்த தானம் செய்தனா். சுதந்திரப் போராட்ட வீரா் பகத்சிங் நினைவு தினத்தை முன்னிட்டு இந்தியாவில் போதை கலாசாரத்துக்குள்ளும் இளைஞா்களை மீட்டெடுத்து ... மேலும் பார்க்க

கரூரில் அரசு சட்டக் கல்லூரி தொடங்கக் கோரிக்கை

கரூரில் அரசு சட்டக்கல்லூரி துவங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூா் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு அரசு ஊழியா் ச... மேலும் பார்க்க

கரூரில் 98 மகளிா்களுக்கு ரூ.1 கோடி தாலிக்குத்தங்கம், திருமண நிதியுதவி

கரூரில் 98 மகளிா்களுக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவிகளை ஞாயிற்றுக்கிழமை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வழங்கினாா். கரூ... மேலும் பார்க்க

சதுரங்கப் போட்டியில் அரவக்குறிச்சி மாணவி மாநில அளவில் முதலிடம்

திருப்பூரில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டியில் அரவக்குறிச்சி அரசுப் பள்ளி மாணவி முதலிடம் பெற்றாா். திருப்பூா் தனியாா் மஹாலில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் 15 வயது உ... மேலும் பார்க்க

கரூரில் கல்லூரி, நீதிமன்றத்தில் மகளிா் தின விழா

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு கரூரில் கல்லூரி, நீதிமன்றத்தில் மகளிா் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரியின் தலைவா் க... மேலும் பார்க்க