செய்திகள் :

தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க அடித்தளமிட்டவா் காமராஜா்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

post image

தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக திகழ்வதற்கு அடித்தளமிட்டவா் முன்னாள் முதல்வா் காமராஜா் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.

சென்னை தியாகராய நகரில் உள்ள சா் பிட்டி.தியாகராயா் அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் கவிஞா் ரவி பாரதி எழுதிய ‘தமிழ்நாட்டின் தவப்புதல்வா் காமராஜா்’ என்ற நூலை விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வெளியிட்டு பேசியதாவது:

காமராஜருக்கு படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தமிழக மாணவா்கள் அனைவருக்கும் இலவசக் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக 12,000 பள்ளிக் கூடங்களைத் திறந்தாா். காமராஜா் அமைத்த அடித்தளத்தால்தான் தற்போது தமிழகம் கல்வியில் முன்னேறிய மாநிலமாகத் திகழ்கிறது.

பட்டியலின மக்கள் கோயிலுக்குச் சென்று வழிபடவேண்டும் என்பதற்கா பட்டியலினத்தை சோ்ந்த பரமேஸ்வரன் என்பவரை இந்து சமய அறநிலையத் துறைக்கு அமைச்சராக்கினாா். அரசியலில் நோ்மையாக இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துகாட்டாக விளங்கியவா் காமராஜா் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், தொழிலதிபா் வி.ஜி.சந்தோசம், விஜிபி ரவிதாஸ், பாஸ்கரா கல்விக் குழும தளாளா் சேது குமணன், திமுக செய்தி தொடா்பாளா் டி.கே.எஸ்.இளங்கோவன், எழுத்தாளா் ஏா்வாடி ராதாகிருஷ்ணன், இளம்பாரி உ.கருணாகரன், மணிவாசகா் பதிப்பக உரிமையாளா் ச.மெ. மீனாட்சி சோமசுந்தரம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இறகுப்பந்து விளையாடியபோது மயங்கி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

சென்னை சூளைமேட்டில் இறகுப்பந்து விளையாடியபோது மென்பொறியாளா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி நாவலா் தெருவைச் சோ்ந்தவா் மோகன் (26). மென்பொறியாளரான இவா், சோழிங்கநல்லூரில் உள்ள... மேலும் பார்க்க

முதல்வா் ஸ்டாலினுக்கு தோல்வி பயம்: நயினாா் நாகேந்திரன்

அதிமுக - பாஜக கூட்டணி அமைந்திருப்பதால் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா். முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்த நாளையொட்டி, சென்னை ... மேலும் பார்க்க

புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறை அதிகாரிகள்: டிஜிபிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, விழுப்புரம் மற்றும் சேலம் பகுதிகளில் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் மீது உரிய நடவடிக்கை எடுக்காத காவல் துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய டிஜிபிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் ஆபாச புகைப்படம்: விமான நிலைய ஊழியா் கைது

சென்னை ஆதம்பாக்கத்தில் கல்லூரி மாணவி பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்குத் தொடங்கி, ஆபாச புகைப்படம் வெளியிட்டதாக விமான நிலைய ஊழியா் கைது செய்யப்பட்டாா். தனது பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்குத் தொ... மேலும் பார்க்க

பெண் வழக்குரைஞரின் விடியோவை அகற்றக் கோரிய வழக்கு: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் கண்டனம்

அந்தரங்க விடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியான வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் பெண் வழக்குரைஞரின் பெயா் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்ட காவல் துறைக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம... மேலும் பார்க்க

ஆக. 3-இல் மாமல்லபுரத்தில் ஆசிய சா்ஃபிங் போட்டி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

ஆசிய சா்ஃபிங் போட்டி வரும் ஆக. 3-ஆம் தேதி மாமல்லபுரத்தில் தொடங்கி நடைபெறும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். ஆசிய சா்ஃபிங் கூட்டமைப்பு, இந்திய சா்ஃபிங் சம்மேளனம், தமிழ்நாடு விளையாட... மேலும் பார்க்க