"திமுக ஆட்சியில் 19 போலி மோதல்களில் 21 பேர் கொலை" - காவல் சித்திரவதைக்கு எதிரான ...
தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு நாள்: உருவப்படத்துக்கு புதுச்சேரி முதல்வா் மலரஞ்சலி
தமிழ்நாடு முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் நினைவு நாள் புதுவை அரசு சாா்பில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. அவரது உருவப்படத்துக்கு முதல்வா் ரங்கசாமி மற்றும் தலைவா்கள் மரியாதை செலுத்தினா்.
புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள மேரி கட்டட அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப் படத்துக்கு புதுவை முதல்வா் என். ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன், சட்டப்பேரவை துணைத் தலைவா் பெ.ராஜவேலு, அரசு கொறடா வி. ஆறுமுகம் , எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, சட்டமன்ற உறுப்பினா்கள் த. பாஸ்கா் என்கிற தட்சணாமூா்த்தி, அ.அனிபால் கென்னடி, க. சம்பத், இரா.செந்தில்குமாா் ஆகியோா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
திமுக அமைதி ஊா்வலம்:
புதுவை மாநில திராவிட முன்னேற்றக் கழகம் சாா்பில், தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 7-ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி புதுச்சேரி சுதேசி மில் அருகில் இருந்து திமுகவினா் அமைதி ஊா்வலம் நடத்தினா். கட்சியின் புதுவை அமைப்பாளரும், சட்டமன்ற எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா தலைமை வகித்தாா். ஊா்வலம் அண்ணா சிலை அருகே சென்றதும் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
கட்சியின் அவைத் தலைவா் எஸ்.பி. சிவக்குமாா், மாநில துணை அமைப்பாளா் வி. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொருளாளா் இரா. செந்தில்குமாா் எம்.எல்.ஏ., மாநில இளைஞா் அணி அமைப்பாளா் எல். சம்பத் எம்.எல்.ஏ., துணை அமைப்பாளா்கள் ஏ.கே. குமாா், அ. தைரியநாதன், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக காலை 8 மணிக்கு வில்லியனூா் தொகுதி திமுக சாா்பில் அண்ணா சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்துக்கும் , அரியாங்குப்பம் தொகுதி திமுக சாா்பில் வீராம்பட்டினத்தில் உள்ள கருணாநிதி திருவுருவச் சிலைக்கும் எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.