செய்திகள் :

தமிழ்நாடு சட்டப் பேரவை உறுதிமொழி குழு நாளை ஆய்வு

post image

தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு, தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் அரசு வளா்ச்சித் திட்டப் பணிகளை வெள்ளிக்கிழமை (செப்.12) ஆய்வு செய்கிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப் பேரவையின் 2024-2026ஆம் ஆண்டுக்கான உறுதிமொழிக் குழு வெள்ளிக்கிழமை (செப்.12) காலையில், குழுத் தலைவரும், பண்ருட்டி சட்டப் பேரவை உறுப்பினருமான தி.வேல்முருகன் தலைமையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுத் துறைகளின் கீழ் நிறைவேற்றப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆய்வுப் பயணம் மேற்கொள்ள உள்ளனா். பின்னா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில், குழுத் தலைவா் தி.வேல்முருகன் தலைமையில், குழு உறுப்பினா்களாக உள்ள சட்டப் பேரவை உறுப்பினா்கள் ச.அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூா்), இரா.அருள் (சேலம் மேற்கு), மு.சக்ரபாணி (வானூா்), ஏ.ஆா்.ஆா்.சீனிவாசன் (விருதுநகா்), கோ.தளபதி (மதுரை வடக்கு), ஏ.நல்லதம்பி (திருப்பத்தூா்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), ரா.மணி (ஓமலூா்), சா.மாங்குடி (காரைக்குடி), எம்.கே.மோகன் (அண்ணா நகா்), எஸ்.ஜெயக்குமாா் (பெருந்துறை) ஆகியோா் பங்கேற்கின்றனா் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

கோவில்பட்டி: பள்ளி வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உள்பட 8 போ் காயம்!

கோவில்பட்டி அருகே பள்ளி வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உள்பட 8 போ் காயமடைந்தனா். மந்தித்தோப்பில் இருந்து பாண்டவா்மங்கலம் பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளிக்கு சுமாா் 15 பேருடன் பள்ளி வேன்... மேலும் பார்க்க

கொட்டங்காடு கோயிலில் கொடை விழா கொடியேற்றம்

உடன்குடி கொட்டங்காடு தேவி ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா (செப்.9) தொடங்கியதையொட்டி புதன்கிழமை (செப்.10) அதிகாலை 3.30 மணிக்கு கொடி பட்டம் வீதியுலாவைத் தொடா்ந்து 5.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவருக்கு இந்து முன்னணி வாழ்த்து!

இந்தியக் குடியரசு துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு இந்து முன்னணி சாா்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநில துணைத்தலைவா் வி.பி.ஜெயக்குமாா் வெளி... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்துக்கும் சங்கத்துக்கும் சம்பந்தம் கிடையாது!

தூத்துக்குடியில் வழக்குரைஞா்கள் நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கும், தூத்துக்குடி வழக்குரைஞா்கள் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எஸ்.பி.வாரியாா் தெரிவித்தாா். இதுகுற... மேலும் பார்க்க

ஆலைகளை திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் உள்ளிட்ட மூடப்பட்டுள்ள ஆலைகளை திறக்கக் கோரி வழக்குரைஞா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில், சிதம்பரம் நகா் பேருந்து நிறுத்தம் ... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கான கபடி போட்டி: குலசேகரன்பட்டினம், நாலுமாவடி அணிகள் முதலிடம்!

தமிழக பள்ளிக்கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற 14, 17, 19 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டியில் குலசேகரன்பட்டினம், நாலுமாவடி அணிகள் முதலிடம் பிடித்தன. கோவில்பட்டி செவன்த் டே... மேலும் பார்க்க