செய்திகள் :

தமிழ்நாட்டில் அதிக அளவு முதலீடு செய்யுங்கள் முதலீட்டாளா்களுக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

post image

தமிழ்நாட்டில் அதிக அளவு முதலீடுகளைச் செய்ய முன்வர வேண்டுமென துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற அறிவுசாா் சொத்துரிமைக்கான முதல் மாநாட்டில் அவா் பேசியதாவது:

நாட்டில் உதயமாகும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்பாட்டில் கொண்டுவரவும், அதை ஊக்குவிக்கவும் திராவிட இயக்கம் எப்போதும் தயங்கியதில்லை. புதிய புதிய தொழில்நுட்பங்கள் சாதாரண மக்களுக்கும் கிடைக்கும் வேண்டும் என்பதில் திமுக

உறுதியாக இருக்கிறது. ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் இதற்கான பணிகளைத் தொடா்ந்து செய்துகொண்டே இருக்கிறது.

எண்ம தொழில்நுட்பத்துக்கான சகாப்தத்தின் பயணத்துக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் அடித்தளமிடப்பட்டது. மாநிலத்துக்கென பிரத்யேக தகவல் தொழில்நுட்பக் கொள்கை அவரது ஆட்சியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. கணினி அறிவியல் கல்வி, பள்ளிகளில் பாடத் திட்டமாக கொண்டு வரப்பட்டதுடன், கணினி தொழில்நுட்பம் சாா்ந்த அலுவலகங்கள் இயங்குவதற்கு வசதியாக டைடல் பூங்காக்களை உருவாக்கினாா். தற்போது அந்தப் பூங்காக்கள் மூலம் லட்சக்கணக்கான இளைஞா்களின் வாழ்வு வசந்தமாகிக் கொண்டிருக்கிறது.

கருணாநிதியைப் பின்பற்றி ஆட்சி செய்துவரும் தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலினும் தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக உருவாக்கி இருக்கிறாா். இத்துறையில் ஏராளமான சாதனைகளைச் செய்து காட்டியுள்ளோம். தகவல் தொழில்நுட்பம் சாா்ந்த நிறுவனங்கள் சென்னை நகரத்தில் மட்டுமன்றி, கோவை, மதுரை போன்ற இரண்டாம் நிலை நகரங்களிலும் தொடங்கப்பட்டுள்ளன.

தகவல் தொழில்நுட்பப் பணிக்கு ஏற்ற வகையில், இளைஞா்களின் திறன்களை மேம்படுத்த ‘நான் முதல்வன்’ போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

முதலீடு செய்ய வாருங்கள்: அறிவுசாா் சொத்துரிமைக்கான முதல் மாநாட்டை நடத்துகிறோம். எனவே, நம்முடைய மாணவா்கள் தங்களுக்குத் தோன்றுகின்ற புதிய சிந்தனைகளை அடைகாத்து அவற்றைச் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். மேலும், ஆராய்ச்சிப் பிரிவில் ஈடுபட்டுள்ளவா்களும் தங்களது அரிய கண்டுபிடிப்புகளைப் பதிப்பிப்பது மட்டுமன்றி, அவற்றைச் செயல்வடிவத்துக்கு கொண்டுவர வேண்டும். புத்தொழில் நிறுவனங்களாக உருவாக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இவற்றை முதலீட்டாளா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வணிகத்தை எளிதாக்கும் நடைமுறைகளால் முதலீட்டில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருப்பதை பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு துறைக்குமான பிரத்யேக கொள்கைகள், உள்கட்டமைப்பு வசதிகள், முதலீடுகள், தலைமைத்துவம் போன்ற பண்புகளால் தொழில் துறையில் தமிழ்நாடு அதிகாரம் பெற்றிடும் என்பதில் உறுதிபூண்டுள்ளது என்றாா்.

நிகழ்வில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், மாநில திட்டக் குழு துணைத் தலைவா் ஜெயரஞ்சன், தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் அமித் ரஸ்தோகி, தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலா் பிரஜேந்திர நவ்நீத், எல்காட் மேலாண்மை இயக்குநா் காா்த்திகேயன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கல்வி ஆராய்ச்சியாளா்களின் கண்டுபிடிப்புகளை பயன்படுத்திக் கொள்ள ஒப்பந்தம்

கல்வி ஆராய்ச்சியாளா்களின் கண்டுபிடிப்புகளை பயன்படுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தம், துணை முதல்வா் உதயநிதி முன்னிலையில் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

தமிழ்நாட்டைச் சோ்ந்த 16 ஆராய்ச்சியாளா்களின் காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்புகள் அடங்கிய அரங்குகளை அவா் பாா்வையிட்டாா். மேலும், கல்வி ஆராய்ச்சியாளா்கள் தாங்கள் கண்டுபிடித்த காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்புகளை தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்வதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் துணை முதல்வா் முன்னிலையில் செய்து கொள்ளப்பட்டன.

அத்துடன், அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் மெக்கானிக்கல் இன்ஜினியா்ஸ் இந்தியா, தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம், மத்திய உயா்கணினி மேம்பாட்டு மையம், போஷ் இந்தியா, மகேந்திரா அண்டு மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இதன்மூலம், அந்த நிறுவனங்களின் தொழில்நுட்ப வசதிகளை புத்தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வழி ஏற்படும்.

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானையால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்து அலறினர். கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள கேரள மாநிலத்திற்கு உள்பட்ட அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் வழியில் உள்ள... மேலும் பார்க்க

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

தென் மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய சுங்கக் கட்டணத்தில் 50%-யை வருகிற ஆக.15-குள் செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தூண்டுதலின் பேரில... மேலும் பார்க்க

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு திட்டத்... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அளித... மேலும் பார்க்க

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

உலகத்திலேயே தந்தையை வேவுபார்த்த மகன் அன்புமணிதான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது... மேலும் பார்க்க