செய்திகள் :

``தமிழ்நாட்டில் உள்ள பிரச்னைகளை மறைக்கவே மாநில சுயாட்சி..'' - பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

post image

நெல்லை போவதற்கு சென்னையிலிருந்து மதுரை வந்த நயினார் நாகேந்திரன், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "கருணாநிதி 1969-ல் உருவாக்கிய ராஜமன்னார் குழு பரிந்துரைகள் குறித்து கடிதம் எழுதியதற்கு அப்போது பிரதமர் இந்திராகாந்தி பதிலே கொடுக்கவில்லை. இன்றைக்கு மாநில சுயாட்சி தொடர்பாக உயர்நிலைக்குழு தேவையில்லை.

நயினார் நாகேந்திரன்

நீட், ஜிஎஸ்டி காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பிரச்னைகளையும் மறைக்க மாநில சுயாட்சி என்று தங்கள் யோசனைகளை ஒவ்வொன்றாக அறிவித்து வருகிறார்கள்.

ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்துவதை கட்டுப்படுத்த முடியாது. பொன்முடி விவகாரம் தொடர்பாக ஆளுநரை நான் சந்திக்கவில்லை. அது தவறான தகவல். தமிழகத்தில் எதுவுமே சரியாக நடக்கவில்லை. எல்லோரும் கஞ்சா குடிக்கிறார்கள், கிராமப்புறங்களில் இளைஞர்களிடையே கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அந்தக்கடமையை செய்ய தவறி வருகிறது.

நயினார் நாகேந்திரன்

மதுரையில் கல்லூரி விழாவில் மாணவர்கள் மத்தியில் ஆளுநர் என்ன பேசினார் எனத் தெரியாது. தெரிந்து கொண்டு பேசுகிறேன்" என்றவரிடம்,

'அதிமுக-பாஜக கூட்டணி குறித்து நிர்வாகிகள் பேசாமல் தவிர்ப்பது, பொள்ளாச்சி ஜெயராமன் நடத்திய கூட்டத்தில் கட்சி நிர்வாகி கண்ணீர் வடித்துள்ளாரே' என்ற கேள்விக்கு,

"அதிமுகவில் கிளைச்செயலாளர் தொடங்கி அனைவரையும் எனக்கு நன்கு தெரியும். பொள்ளாச்சி ஜெயராமனிடம் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். அதுபோன்ற செய்திகளை என்னால் நம்ப முடியவில்லை. நெல்லை பள்ளியில் நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`நிதி நிறுத்தம்' ட்ரம்ப்பின் நடவடிக்கைக்கு உடன்பட மறுக்கும் ஹார்வார்டு பல்கலைக்கழகம்!

'தனக்கு எதிராக யாரும் பேசக்கூடாது' என்பது தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ஆட்டிட்யூட். இவர் இஸ்ரேல் ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்ததே. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அமெரிக்காவில் யாரும் குரல் கொடுக்கக்கூடா... மேலும் பார்க்க

`டெல்லிக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு நான்; பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது' -எடப்பாடி

சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் இன்று (ஏப்ரல் 16) வெளிநடப்பு செய்திருக்கின்றனர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அப்போது அதிமுக- பாஜக கூட்டணியை திமுக விமர... மேலும் பார்க்க

சீனா: `இந்திய நண்பர்களே!' அமெரிக்கா உடன் பகை; இந்தியாவை அணைக்கும் சீனா!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து, அமெரிக்காவிற்கும், சீனாவிற்கு மறைமுக போர் இருந்துகொண்டே இருந்து வந்தது. 'பரஸ்பர வரி' விதிப்பிற்கு பிறகு இது வெட்ட வெளிச்சம் ஆனது. பரஸ்பர வரிக்கு எதிர்ப்... மேலும் பார்க்க

Doctor Vikatan: திடீரென முளைக்கும் ஞானப்பல்; புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் கொண்டதா?

Doctor Vikatan: என்னுடைய தோழியின் அம்மாவுக்கு வாய்ப் புற்றுநோய் வந்து பல வருடங்களாக சிகிச்சையில் இருக்கிறார். மிக இளம் வயதிலேயே அவருக்கு வாய்ப்புற்றுநோய் பாதித்திருக்கிறது. ஞானப்பல் குத்திக்குத்திபுண்... மேலும் பார்க்க

`நானே உதவுகிறேன்' - ட்ரம்ப் அந்தர் பல்டி, அமெரிக்காவில் இருந்து வெளியேறும் மக்களுக்கு ஜாக்பாட்!

அமெரிக்காவில் ஆவணம் செய்யப்படாமல் குடியேறி இருக்கும் மக்களை வெளியேற்றுவது வழக்கம் தான். இது 2009-ம் ஆண்டிலிருந்து வழக்கத்தில் இருக்கிறது. ஆனாலும், இந்த ஆண்டு வெளியேற்றப்பட்டது தான் உலகம் முழுவதும் கடு... மேலும் பார்க்க