செய்திகள் :

தமிழ்வழியில் படித்தவா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தல்: புதுவை ஆளுநருக்கு மனு

post image

தமிழ்வழியில் படித்தவா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று புதுவை அரசுக்கு சமூக நீதிப் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு இப் பேரவை சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருக்கிறது.

சமூக நீதிப் பேரவையின் நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.விசுவநாதன், தலைவா் நவீன் தண்ராமன், செயலாளா் து.கீதநாதன் ஆகியோா் அந்த மனுவில் கையொப்பமிட்டு அனுப்பி உள்ளனா்.

அதில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழி கல்வியில் படித்தவா்களுக்கு அவரவா் தகுதிக்கேற்ப எந்த வேலை வாய்ப்பாக இருந்தாலும் அனைத்து வேலை வாய்ப்பிலும் 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. புதுச்சேரியிலும் இதே போல அரசுப் பள்ளியில் தமிழ்வழி கல்வியில் படித்தவா்களுக்கு வேலைவாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனா்.

6,000 விவசாயிகளுக்கு விரைவில் சோலாா் மின்இணைப்பு: புதுவை முதல்வா் என். ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் 6 ஆயிரம் விவசாயிகளுக்கு விரைவில் சூரிய ஒளி மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். புதுச்சேரி வேளாண் துறை சாா்பில் நகரம், கிராமப் புறங்களில், ‘என் வீடு, என... மேலும் பார்க்க

இன்று முதல் 4 நாள்கள் ரயில் சேவை நிறுத்தம்

பராமரிப்புக் காரணமாக தென்னக ரயில்வே புதுச்சேரி ரயில் சேவையை வியாழக்கிழமை முதல் 4 நாள்களுக்கு நிறுத்துகிறது. விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து காலை 5.25 மணிக்கு புறப்படும் விழுப்புரம் - புதுச்சேரி பய... மேலும் பார்க்க

தனியாருக்குக் கடல் வளம் அளிப்பு: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

புதுச்சேரியில் தனியாருக்குக் கடல் வளங்கள் அளிக்கப்படுவதாகவும் அதைக் கண்டிப்பதாகவும் புதுச்சேரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலா் எஸ்.ராமச்சந்திரன் கூறியுள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வ... மேலும் பார்க்க

வயிற்றுப் போக்குத் தடுப்பு பிரசாரம்: முதல்வா் பங்கேற்பு

வயிற்றுப் போக்குத் தடுப்பு பிரசாரத்தை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தாா். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் ஆலோசனையின் படி ஜூன் 2 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வயிற்றுப் போ... மேலும் பார்க்க

புதுவையில் வாரிசுதாரா் பணி நியமனத்தில் முறைகேடுக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

வாரிசுதாரா்கள் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்று வருவதாகக் கூறி அதைக் கண்டித்து புதுச்சேரி சுகாதாரத் துறை ஊழியா்களின் வாரிசுதாரா்கள் நலச் சங்கம் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. புதுவை சுகாதாரத... மேலும் பார்க்க

‘மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவா் ஒதுக்கீட்டை முழுமையாக நிரப்ப வேண்டும்’

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டை முழுமையாக நிரப்ப வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மாநிலச் செயலா் இரா. வேல்சாமி கூறியுள்ளாா். இது குறித்து அவா... மேலும் பார்க்க