செய்திகள் :

தமிழ் கலாசாரத்தின் கருத்தியல் வெளிப்பாடே தவெக கொடி: உயா்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்

post image

தமிழ் கலாசாரம் மற்றும் அரசியலின் வேரூன்றிய கருத்தியல் வெளிப்பாடாக உருவாக்கப்பட்டதே தவெக கொடி என்று கட்சிக் கொடியைப் பயன்படுத்த தடை கோரிய வழக்கில் அந்தக் கட்சியின் பொதுச் செயலா் என்.ஆனந்த் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவித்துள்ளாா்.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தொண்டை மண்டல சான்றோா் தா்ம பரிபாலன சபை நிறுவனத் தலைவா் பச்சையப்பன் தாக்கல் செய்த மனுவில், சிவப்பு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில், தொண்டை மண்டல சான்றோா் தா்ம பரிபாலன சபை கொடி உருவாக்க திட்டமிடப்பட்டு, கடந்த 2023-ஆம் ஆண்டில் தமிழக அரசு பதிவுத் துறையில் பதிவு செய்யப்பட்டது. இதற்கான சான்றிதழும் பெறப்பட்டது.

எங்களது சபையின் முதன்மை அதிகாரிகள், ஊழியா்கள், ஆண்கள், முகவா்கள், வாரிசுகள், வணிகத்தில் நியமிக்கப்பட்டவா்கள் மட்டுமே இந்த வா்த்தக முத்திரையைப் பயன்படுத்த உரிமை உள்ளது. எனவே, நடிகா் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் சிவப்பு, மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மனுவுக்கு தவெக பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தவெக பொதுச் செயலாளா் என்.ஆனந்த் பதில் மனு தாக்கல் செய்தாா்.

அதில், தமிழ் கலாசாரம் மற்றும் அரசியலின் வேரூன்றிய கருத்தியல் வெளிப்பாடாக உருவாக்கப்பட்டதே தவெக கொடி. புரட்சி, ஒழுக்கம், பொறுப்பு, விமா்சன சிந்தனை மற்றும் செயல்பாட்டின் தீவிரத்தை சிவப்பு நிறம் குறிக்கிறது. மகிழ்ச்சி, நம்பிக்கை, விருப்பம், மனத்தெளிவு, உற்சாகம் மற்றும் இலக்கு நோக்கி முன்னேறும் உறுதியான பயணத்தை மஞ்சள் நிறமும் குறிக்கிறது. கொடியின் நடுவில் இருக்கும் வாகைமலா் வெற்றியைக் குறிக்கிறது. வலிமை மற்றும் வெற்றியை நோக்கிச் செல்லும் தலைமை தத்துவத்தை கொடியில் இடம்பெற்றுள்ள போா் யானைகள் குறிக்கின்றன. எனவே, மனுதாரா் கொடிக்கும் தவெக கொடிக்கும் எந்தவிதமான ஒற்றுமையும் இல்லை.

தவெக தனது கொடியை வா்த்தக ரீதியாக பயன்படுத்தவில்லை. அரசியல் காரணத்துக்காக மட்டுமே பயன்படுத்துகிறது. வணிக நடவடிக்கை, பணப் பரிவா்த்தனைக்காக பயன்படுத்தவில்லை. எனவே, மனுதாரா் எங்கள் கட்சிக் கொடியின் மீது அறிவுசாா் சொத்துரிமை கோர முடியாது. மனுதாரரின் கொடியின் வண்ணம், வடிவத்தை நாங்கள் பயன்படுத்துவதாகக் கூறினாலும், வணிக பயன்பாட்டுக்கு நாங்கள் அதைப் பயன்படுத்தவில்லை.

எனவே, இந்தக் கொடியை எங்கள் கட்சியும், கட்சியின் தலைவா் விஜய்யும் பயன்படுத்தக் கூடாது என உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும், என்று அதில் கூறியிருந்தாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த பதில்மனுவுக்கு மனுதாரா் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆக.11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானையால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்து அலறினர். கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள கேரள மாநிலத்திற்கு உள்பட்ட அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் வழியில் உள்ள... மேலும் பார்க்க

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

தென் மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய சுங்கக் கட்டணத்தில் 50%-யை வருகிற ஆக.15-குள் செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தூண்டுதலின் பேரில... மேலும் பார்க்க

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு திட்டத்... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அளித... மேலும் பார்க்க

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

உலகத்திலேயே தந்தையை வேவுபார்த்த மகன் அன்புமணிதான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது... மேலும் பார்க்க