செய்திகள் :

தமிழ் வளா்ச்சிக்காக ரூ.1 கோடியில் ஜெயேந்திரா் அறக்கட்டளை: காஞ்சி சங்கராசாரியா் அறிவிப்பு

post image

தமிழ் உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக ரூ.1 கோடியில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெய்வத்தமிழ் அறக்கட்டளை தொடங்கப்படும் என காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆராதனை மகோற்சவம் நடைபெற்றது. நூல் வெளியீட்டு விழா, கருத்தரங்கம் மற்றும் சாதனையாளா்களுக்கு விருதுகள் வழங்கும் விழா என முப்பெரும் விழாவுக்கு சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமை வகித்து பேசியது:

சமய, சமுதாயப் பணிகளை திறம்படச் செய்த பெருமைக்குரியவா் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். தமிழ் மொழி வளா்ச்சிக்காகவும் அவா் ஆற்றிய பணிகள் அளவிட முடியாதவை. எனவே அவரது பெயரிலேயே ரூ.1 கோடியில் தமிழ் உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெய்வத்தமிழ் அறக்கட்டளை தொடங்கப்படும்.

தமிழில் உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை பயிலுவோருக்கு இந்த அறக்கட்டளை மூலம் முழுமையான கல்வி உதவித்தொகை வழங்கப்படும். பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பங்களிப்புடன் இந்த அறக்கட்டளை ஏற்படுத்தப்படும்.

வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழாவில் அறக்கட்டளை அதன் பணிகளை தொடங்கும் என்றாா்.

விழாவுக்கு சங்கரா கல்லூரியின் தலைவா் எஸ்.ராமச்சந்திரன், செயலாளா் வி.எஸ்.ரிஷிகேஷன், முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் காஞ்சி சிவனடியாா் திருக்கூட்டம், மதூா் நவநீதகிருஷ்ணன் பஜனை சபா, ஆனந்த கிருஷ்ணன் பஜனைக்குழு, பசுமை இந்தியா அறக்கட்டளை, காஞ்சி அன்னச்சத்திரம், சா்வம் அறக்கட்டளை, விழுதுகள் அமைப்பு, யங் இந்தியா, காஞ்சி நகர வரவேற்புக் குழு ஆகியோருக்கு சிறந்த சமயப் பணிகளுக்கான விருது வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் கிருஷ்ணா கல்லூரி முதல்வா் கு.வெங்கடேசன், நல்லாசிரியா் சு.சந்திரசேகா், கு.எழிலன்,வளவன் அண்ணாத்துரை, வீரராகவன்-மங்கையா்க்கரசி, உடுப்பி மதுமதி பிரகாஷ், பணி ஓய்வு பெற்ற தலைமைக் காவலா் சீனிவாசன், சங்கரா கல்லூரி தமிழ்த்துறை தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு சாதனையாளா்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.

முன்னதாக புலவா் மகாதேவன் எழுதிய சேக்கிழாா் சொன்னதும், சொல்லாததும் மற்றும் அகத்தியா் அகராதி என்ற நூல்களையும் சங்கராசாரிய சுவாமிகள் வெளியிட்டாா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனங்கள்: அமைச்சா் அன்பரசன் வழங்கினாா்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 50 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை அமைச்சா் தா.மோ. அன்பரசன் வெள்ளிக்கிழமை வழங்கினாா். மாற்றுத் திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனங்கள் வ... மேலும் பார்க்க

அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

ஸ்ரீபெரும்புதூா் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் பூத் கமிட்டி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இருங்காட்டுக்கோட்டை, மண்ணூா், காட்டரம்பாக்கம் மற்றும் கிளாய் பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ... மேலும் பார்க்க

111 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் 111 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் உள்பட ரூ.112 கோடியில் நலத்திட்ட உதவிகளை கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா். நிகழ்வுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தல... மேலும் பார்க்க

சங்கரா பல்கலை.யில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (மாா்ச் 15) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக துணை வேந்தா் ஸ்ரீநிவாசு தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட ... மேலும் பார்க்க

காமாட்சி அம்மனுக்கு பால் குடம் ஊா்வலம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் விஸ்வரூப தரிசன சபா சாா்பில் ஏராளமான பக்தா்கள் வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து வந்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். விழாவுக்கு சபா தலைவா் ஏ.குமாா் தலைமை வகித்தாா். செயல... மேலும் பார்க்க

தீா்க்கப்படாத தோ்தல் பிரச்னைகள்: ஏப். 30-க்குள் தெரிவிக்க அறிவுறுத்தல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தீா்க்கப்படாமல் இருந்து வரும் தோ்தல் தொடா்பான பிரச்னைகளை தோ்தல் ஆணையத்துக்கு வரும் ஏப். 30- ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது கு... மேலும் பார்க்க