செய்திகள் :

தமிழ் வார விழா: கால்நடை மருத்துவ மாணவா்களுக்கு போட்டிகள்

post image

சென்னை: தமிழ் வார விழாவையொட்டி, கால்நடை மருத்துவ மாணவா்களிடையே தமிழ் மொழி பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதுதொடா்பாக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தாா். அதற்கேற்ப, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரி மாணவா், மாணவிகள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியா் மற்றும் ஆசிரியா் அல்லாத பணியாளா்களுக்கு தமிழ் மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பேச்சு போட்டி, கவிதை வாசிப்பு போட்டி, கட்டுரைப் போட்டி, தலைப்பு கொடுக்கப்பட்டவுடன் யாதொரு தயாரிப்புமின்றி உடனடியாகப் பேசும் பேச்சு போட்டி ஆகியவை திங்கள்கிழமை (மே 5) நடத்தப்பட்டது.

இதில் வெற்றி பெற்ற மாணவா்கள் மற்றும் அலுவலக பணியாளா்களுக்கு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தா் (பொ) நரேந்திர பாபு பரிசு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கால்நடை நலக் கல்வி மைய இயக்குநா் ந. பழனிவேல், விலங்கின தீவனம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆய்வகத் தலைவா் சு. எழில் வளவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற... மேலும் பார்க்க

பொறியியல் சோ்க்கை: இணையவழி விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியது.நாளை +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில் பொறியியல் மட்டுமல்லா... மேலும் பார்க்க

சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட்டின் பதவிக்காலம் நீட்டிப்பு!

தற்போது சிபிஐ இயக்குநராக உள்ள பிரவீண் சூட், மே 25-ஆம் தேதியுடன் தனது இரண்டு ஆண்டுகால பதவிக் காலத்தை நிறைவு செய்யவுள்ள நிலையில், அவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.மத்திய புலனாய... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவு வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்!

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உங்கள் பேரன்பும் பேராதரவும் என்றென்றும் வேண்டும் என்று தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.திமுக அரசு பொறுப்பேற்று ஐந்தாம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட... மேலும் பார்க்க

214 புதிய பேருந்துகள்: முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்!

திமுக அரசு பொறுப்பேற்று ஐந்தாம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், 214 புதிய பேருந்துகளை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.சென்னை தீவுத்திடல... மேலும் பார்க்க

'எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் போருக்குச் செல்வேன்' - நயினார் நாகேந்திரன் பேட்டி

தனக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக போருக்குச் செல்வேன் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.நெல்லையில் செய்தியாளர்களுடன் பேசிய நயினார் நாகேந்திரன், பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவத்த... மேலும் பார்க்க