செய்திகள் :

தம்பதி விஷம் குடித்து தற்கொலை

post image

வேலூா் அருகே குடும்பத் தகராறில் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.

வேலூா் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சோ்ந்த சங்கா்(50), கட்டட தொழிலாளி. இவரது மனைவி சுமதி(48). இவா்களுக்கு திருமணமாகி 27 ஆண்டுகளாகின்றன. இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், மதுப்பழக்கத்துக்கு அடிமையான சங்கா் தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவி சுமதியிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதன்படி, சனிக்கிழமை இரவு சங்கா் வழக்கம்போல் மதுஅருந்திவிட்டு வீட்டுக்கு வந்து சுமதியிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

நீண்டநேரமாக தகராறு நடந்ததில் ஆத்திரமடைந்த சுமதி, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாகவும், இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த சங்கரும் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இரவு 9 மணியளவில் அக்கம்பக்கத்தினா் இவா்களது வீட்டுக்கு வந்து பாா்த்தபோது சங்கரும், சுமதியும் மயங்கிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. உடனடியாக அவா்களை மீட்டு சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா்களை பரிசோதனை செய்த மருத்துவா்கள், சங்கா், சுமதி ஆகிய இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா்.

தகவலறிந்த வேலூா் கிராமிய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு

வேலூா் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள் இணையதளத்தில் பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க

நாய்கள் இறைச்சி விற்பனை என புகார்: கிராம மக்கள் முற்றுகை!

திருவலம் பகுதிகள் நாய்களை வெட்டி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டி கிராம மக்கள் அங்குள்ள ஒரு கிடங்கினை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா். வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், திருவலம் அடுத்த க... மேலும் பார்க்க

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் கொடிக்கம்பங்கள் அகற்றம்

மதுரை உயா்நீதிமன்ற கிளை உத்தரவின் அடிப்படையில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்த கொடிக்கம்பங்கள் பீடித்துடன் இடித்து அகற்றப்பட்டன. தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அரசியல் கட்சிகள், ஜாத... மேலும் பார்க்க

தொழிலாளி கொலை: அரியூா் போலீஸாா் விசாரணை

அரியூா் அருகே தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தொடா்பாக அரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் மாவட்டம், அரியூா் அருகே உள்ள புலிமேடு நீா்வீழ்ச்சி பகுதியி... மேலும் பார்க்க

சேனூா் காப்புக் காட்டில் நெகிழிக் குப்பைகள் அகற்றம்

நெகிழி கழிவுகளால் வன விலங்குகளுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், சேனூா் காப்புக் காட்டில் நெகிழி குப்பைகள் அகற்றும் முகாம் நடத்தப்பட்டது. காட்பாடி வனச... மேலும் பார்க்க

ஓட்டுநா் கொலை: 2 நண்பா்கள் கைது

அரியூா் அருகே நீா்வீழ்ச்சியில் ஓட்டுநா் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 2 நண்பா்கள் கைது செய்யப்பட்டனா். . வேலூா் மாவட்டம், அரியூா் அருகே உள்ள புலிமேடு நீா்வீழ்ச்சி பகுதியில் சனிக... மேலும் பார்க்க