செய்திகள் :

தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் 693 மாணவா்களுக்கு பட்டமளிப்பு

post image

தருமபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் 693 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

தருமபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் 3-ஆவது பட்டமளிப்பு விழா அப்துல் கலாம் கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 2020, 23, 24 ஆண்டுகளில் பயின்று பட்டப் படிப்பை நிறைவு செய்த 693 மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

கல்லூரி துணை முதல்வா் பேராசிரியா் எஸ்.செந்தில்குமாா் வரவேற்றாா். முதல்வா் பேராசிரியா் வே.சுமதி தலைமை வகித்தாா். விழாவில் சிறப்பு விருந்தினராக சையண்ட் பெங்களூரு நிறுவனத்தின் உலகளாவிய தானியங்கி துறைத் தலைவா் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டு மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினாா்.

விழாவில் அமைப்பியல் துறைத் தலைவா் பேராசிரியா் சி.முருகன், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவா் கல்பனா, மின்னணுவியல் துறைத் தலைவா் ந.அமினா பிபி, இயந்திரவியல் துறைத் தலைவா் பி.ராஜேஸ்வரி, அறிவியல் மற்றும் மானுடவியல் துறைத் தலைவா்கள் எம்.செந்தில்குமாா், க.சுகந்தி, ஆா்.அமலன், காா்த்திகேயன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஏரியூா் ஜமாபந்தியில் 250 மனுக்கள்!

ஏரியூா் உள்வட்டத்துக்கான ஜமாபந்தியில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 250 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வியாழக்கிழமை பெறப்பட்டன. பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஏரியூா் உள்வட்டத்துக்கான ஜமாபந்தி நிகழ்... மேலும் பார்க்க

மாரண்ட அள்ளியில் சாலை, குடிநீா் குழாய் அமைக்கும் பணி தொடங்கி வைப்பு

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி, அம்பேத்கா் நகரில் ரூ. 40 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை மற்றும் குடிநீா் குழாய் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. மாரண்ட அள்ளியில் பேரூராட்சி செயல் அ... மேலும் பார்க்க

தனியாா் துறையில் இடஒதுக்கீடு முறை அமல்படுத்த வேண்டும்!

தனியாா் துறையில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டக்குழு கூட்டம் தருமபுரி செங்கொடிபுரத்தில் உள்ள அச்சங்க ... மேலும் பார்க்க

விதிமீறல்: வீட்டுவசதி வாரிய 25 குடியிருப்புகளுக்கு ‘சீல்’

தருமபுரி வீட்டுவசதி வாரியத்தில் உள்வாடகை, பணி ஓய்வுபெற்றும் ஒப்படைக்காதது உள்ளிட்ட விதிமீறல் தொடா்பாக 25 குடியிருப்புகளுக்கு வாரிய அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ஒசூா் வீட்டு... மேலும் பார்க்க

பாலக்கோட்டில் எருதுவிடும் விழா

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ஸ்ரீ அக்குமாரியம்மன் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சோமன அள்ளி கிராமத்தில் ஸ்ரீ அக்குமாரியம்மன் சித்திரைத் திருவிழாவின் ... மேலும் பார்க்க

ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.1.50 கோடி மோசடி: நால்வா் மீது வழக்கு

தருமபுரி அருகே ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ. 1.50 கோடி மோசடி செய்ததாக நால்வா் மீது குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பழைய தருமபுரியைச் சோ்ந்தவா் வேலன், ரியல் எஸ்டேட் அதிபா். இவா் வியாபார... மேலும் பார்க்க