பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிக...
தனியாா் துறையில் இடஒதுக்கீடு முறை அமல்படுத்த வேண்டும்!
தனியாா் துறையில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியது.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டக்குழு கூட்டம் தருமபுரி செங்கொடிபுரத்தில் உள்ள அச்சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் ஏ.சேகா் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் த.செல்லக்கண்ணு பேசினாா். மாவட்டப் பொருளாளா் கே.கோவிந்தசாமி, விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் எம்.முத்து, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் சோ.அருச்சுனன், மாதா் சங்க மாவட்டச் செயலாளா் ஆா்.மல்லிகா, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் குறளரசன், மாவட்டச் செயலாளா் எம். அருள்குமாா் ஆகியோா் பங்கேற்று பேசினா்.
இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்டம், தென்கரைக்கோட்டை அருகே 17 வயது சிறுவனை கட்டி வைத்து ஜாதி பெயரைக் கூறி தாக்குதல் நடத்தி, அச்சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்ததை திரும்பப்பெற வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு வன்கொடுமை சட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்க வேண்டும்.
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். தனியாா் துறையில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் வரும் மே 27 அன்று தருமபுரியில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.